கோவை மகேசன்
From Wikipedia, the free encyclopedia
கோவை மகேசன் (மகேஸ்வர சர்மா, மார்ச் 22 1938 - சூலை 4 1992) ஈழத் தமிழ் பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். சுதந்திரன் வாரப் பத்திரிகை, மற்றும் சுடர் மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழின விடுதலையே இவரது உயிர் மூச்சாக இருந்தது. நாட்டுப் பற்றாளராக, இனப் பற்றாளராக தன் இறுதி மூச்சு உள்ளவரை பணியாற்றியவர். மகேஸ்வரசர்மா என்ற பெயரை மகேசன் எனவும், கோப்பாயைக் குறிக்க கோவை என்றும் சேர்த்துத் தனது பெயரைக் கோவை மகேசன் என எழுதினார்.
விரைவான உண்மைகள் கோவை மகேசன், பிறப்பு ...
கோவை மகேசன் | |
---|---|
![]() | |
பிறப்பு | மகேசுவர சர்மா (1938-03-22)22 மார்ச்சு 1938 கோப்பாய், யாழ்ப்பாணம் |
இறப்பு | சூலை 4, 1992(1992-07-04) (அகவை 54) சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், பத்திரிகையாளர், தமிழீழ உணர்வாளர், அரசியல்வாதி |
சமயம் | இந்து |
பெற்றோர் | சோ. இரத்தினசபாபதி ஐயர், இரத்தினம்மா. |
வாழ்க்கைத் துணை | விசாலாட்சி |
மூடு