கட்டுவள்ளம்
From Wikipedia, the free encyclopedia
கட்டுவள்ளம் அல்லது கெட்டுவள்ளம் (Kettuvallam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் காணப்படும் ஒருவகையான படகு வீடு ஆகும். கட்டு வள்ளம் என்பது கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட படகு எனப்பொருள் தரும். இப்படகு வீடுகள் 60 முதல் 70 அடி நீளமும் படகின் நடுப்பகுதியில் 15 அடி அகலமும் கொண்டிருக்கின்றன. இப்படகுகள் பொதுவாக அஞ்சிலி மரத்தைக் கொண்டு செய்யப்பட்டு இருக்கும். பொதுவாக இப்படகுகளின் கூரை பனை ஓலை மற்றும் மூங்கில்கள் கொண்டு வேயப்பட்டு இருக்கும்[1]. படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க அதன் வெளிப்பகுதி முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது.