![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Sri_Lanka_Eastern_Province_locator_map.svg/langta-640px-Sri_Lanka_Eastern_Province_locator_map.svg.png&w=640&q=50)
கிழக்கு மாகாணம், இலங்கை
இலங்கையின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.
கிழக்கு மாகாணம்
Eastern Province නැගෙනහිර පළාත | |
---|---|
![]() இலங்கையில் அமைவிடம் | |
நாடு | ![]() |
அமைப்பு | 1 அக்டோபர் 1833 |
மாகாணம் | 14 நவம்பர் 1987 |
தொகுதி | திருக்கோணமலை |
முன்னாள் தொகுதி | திருகோணமலை |
மாநகராட்சிகள் | பட்டியல் |
அரசு | |
• ஆளுநர் | ஒஸ்டின் பெர்னாண்டோ |
• முதலமைச்சர் | அகமது நசீர் செய்னுலாப்தீன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,996 km2 (3,859 sq mi) |
• நிலம் | 9,361 km2 (3,614 sq mi) |
• நீர் | 635 km2 (245 sq mi) 6.35% |
• பரப்பளவு தரவரிசை | 2வது (15.24%) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 14,60,939 |
• தரவரிசை | 6வது (6.7%) |
• அடர்த்தி | 150/km2 (380/sq mi) |
இனம் | |
• ஏனையோர் | 4,849 (0.33%) |
சமயம் | |
• ஏனையோர் | 8,367 (0.86%) |
நேர வலயம் | ஒசநே+05:30 (Sri Lanka) |
அஞ்சல் குறியீடு | 30000-32999 |
தொலைபேசிக் குறியீடு | 026, 063, 065, 067 |
ஐஎசுஓ 3166 குறியீடு | LK-5 |
வாகனப் பதிவு | EP |
அதிகாரபூர்வ மொழிகள் | தமிழ், சிங்களம் |
இணையதளம் | Eastern Provincial Council |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/The_flood-lagoon-Batticaloa-from_december_2010_to_feb_2011.jpg/640px-The_flood-lagoon-Batticaloa-from_december_2010_to_feb_2011.jpg)
இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.
இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.