கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1110)
From Wikipedia, the free encyclopedia
கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் கலிங்க அரசு மீது கி.பி. 1110 இல் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவதும் மிகவும் புகழ்பெற்ற படையெடுப்பும் ஆகும்.
முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியும் பல்லவ அரச குலத்தவனுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் சென்ற சோழப்படைகள் எளிதாகக் கலிங்கப் படையைத் தோற்கடித்து, அதன் அரசன் அனந்தவர்மன் சோடகங்கன் ஓடிப்போகும்படி செய்தது. இப்போரும் அதன் விளைவும் கலிங்கத்துப்பரணி எனும் நாட்டுப்பாடலை உருவாக்கியது.