கன்வா போர்
From Wikipedia, the free encyclopedia
கன்வா யுத்தம் (Battle of Khanwa) என்பது மார்ச் 16, 1527 அன்று கன்வா என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தமாகும். இது பாபுரின் படையெடுத்து வந்த தைமூரிய படைகளுக்கும், இராணா சங்கா தலைமையிலான இராசபுத்திர கூட்டமைப்புக்கும் இடையில் வட இந்தியாவின் உச்ச நிலைக்காக நடைபெற்றது. நடுக் கால இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த யுத்தம் கருதப்படுகிறது. தைமூரியர்கள் பானிபட் என்ற இடத்தில் அந்நேரத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், தில்லி சுல்தானகமானது நீண்ட காலமாக சிதைவுற்றுக் கொண்டிருந்த ஓர் அரசாக இருந்தது. மாறாக, இராணா சங்காவின் திறமையான ஆட்சியின் கீழ் மேவார் இராச்சியமானது வட இந்தியாவின் வலிமையான சக்திகளில் ஒன்றாக மாறியிருந்தது. வட இந்தியாவை முகலாயர்கள் வெற்றி கொண்டதில் மிகவும் தீர்க்கமான யுத்தங்களில் ஒன்றாக இந்த யுத்தம் கருதப்படுகிறது.[1][2][3][4][5][6]
வட இந்தியாவில் வெடி மருந்தானது பெருமளவுக்கு பயன்படுத்தப்பட்ட தொடக்க கால யுத்தங்களில் இதுவும் ஒன்றாகும். தைமூரியர்கள் மற்றும் இராசபுத்திரர்கள் ஆகிய இருவருக்குமே கடுமையான உயிரிழப்புகள் இந்த யுத்தம் காரணமாக ஏற்பட்டன.[7]