கண்மணி கிருஷ்ணன்
எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
கண்மணி கிருஷ்ணன் (பி 1948) மலேசியாவில் ஒரு எழுத்தாளரும், வானொலிக் கலைஞருமாவார். ஆரம்பகாலங்களில் கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, குறுநாவல் என பல்துறைகளிலும் ஆர்வம் காட்டிவந்த இவர், வானொலிக் கலைஞராக மாறிய பின்பு வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், புராதன இதிகாச நாடகங்களில் கூடிய ஆர்வத்தைக் காட்டிவந்தார். இவரது எழுத்து பணி தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.