கணித்தமிழ்ச் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
கணித்தமிழ்ச் சங்கம் என்பது கணிப்பொறிப் பயன்பாடுகள், பல்லூடகம், இணையம் மற்றும் வேறெந்த மின்னணு ஊடகத்திலும், கணித்தமிழ் பயன்பாட்டுத் தளத்தில் பணியாற்றி வரும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள், தமிழ் எழுத்துருப் படைப்பாளிகள், பயன்பாட்டுக் கருவிகளை உருவாக்குபவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படும் ஒர் அமைப்பாகும். இதன் தலைவராக கணினி இயல் வல்லுனரும், கணினி தொடர்பான பல தமிழ் நூல்களை எழுதியவருமான மா. ஆண்டோ பீட்டர் என்பவர் இருந்து வந்தார். இவரது மறைவுக்குப் பின்பு சொ. ஆனந்தன் என்பவர் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.