![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/Ganges_River_Dolphin.jpg/640px-Ganges_River_Dolphin.jpg&w=640&q=50)
தென்னாசிய ஆற்று ஓங்கில்
From Wikipedia, the free encyclopedia
Sarcopterygii
தென்னாசிய ஆற்று ஓங்கில் | |
---|---|
![]() | |
கங்கை ஆற்று ஓங்கில் | |
![]() | |
அளவில் ஓப்பீடும்பொழுது சராசரியாக மனிதனைப் போன்று இருக்கும் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
Infraorder: | கடற்பாலூட்டி |
குடும்பம்: | கங்கை டால்பின்கள் John Edward Gray, 1846 |
பேரினம்: | கங்கை டால்பின்கள் Wagler, 1830 |
இனம்: | P. gangetica |
இருசொற் பெயரீடு | |
Platanista gangetica (Lebeck, 1801); (Roxburgh, 1801) | |
துணையினம் | |
Platanista gangetica gangetica | |
![]() | |
கங்கை நதி டால்பின் மற்றும்சிந்து நதி டால்பின் எல்லைப் பகுதிகள் |
தென்னாசிய ஆற்று ஓங்கில் (Platanista gangetica) என்பது நன்னீரில் வாழும் ஓங்கில் இனமாகும். இது இந்தியா, வங்களாதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொதுவாக காணப்படுகிறது, இதனை மேலும் இரு கிளை இனங்களாக பிரிக்கலாம், கங்கை ஆற்று ஓங்கில் (P. g. gangetica) மற்றும் சிந்து ஆற்று ஓங்கில் (P. g. minor).[2] 1970 முதல் 1998 வரை அவை தனி இனமாக அறியப்பட்டு வந்தாலும், 1998 இல் அவை தென்னாசிய ஆற்று ஓங்கில் இனத்தின் துணையினங்களாக வகைப்படுத்தப்பட்டன. கங்கை ஆற்று ஓங்கில் பெரும்பாலும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் பாய்கின்ற நேபாளம், இந்தியா, பங்களாதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது, சிந்து ஆற்று ஓங்கில், பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி மற்றும் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளில் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு, கங்கை ஓங்கிலானது இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரிப்பட்டுள்ளது.[3] சிந்து ஆற்று ஓங்கிலை பாகிஸ்தானிய அரசாங்கம் அதனுடைய தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரித்துள்ளது.[4] மேலும், கங்கை ஆற்று ஓங்கிலை குவகாத்தி நகரம் அதனுடைய நகர விலங்காக தேர்ந்தெடுத்துள்ளது.[5]
கங்கை ஆற்று ஓங்கில் இந்தியா, வங்கதேசம், நேபால் வழி பாயும் கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆறுகளிலும் அவற்றின் கிளை ஆறுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. கங்கை ஓங்கில்கள் நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. மேலும் அவை பார்வையற்றவை. தன் இரையை வேட்டையாட எதிரொலி இடமாக்கம் முறையை கையாளும். மீயொலியை வெளியிட்டு அவை எதிரொலித்து வருவதைக்கொண்டு எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்துகொள்ளும். பொதுவாக தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். தாயும் கன்றும் ஒன்றாகவே காணப்படும்.[6]