க. வேந்தனார்
From Wikipedia, the free encyclopedia
வித்துவான் க. வேந்தனார் (5 நவம்பர் 1918 – 18 செப்டம்பர் 1966) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மரபுவழித் தமிழ்ப் புலமையாளர்களுள் ஒருவர். இவர் சிறந்த தமிழறிஞராய், தமிழ்ப் பற்றாளனாய், ஆசிரியராய், கவிஞராய், சொற்பொழிவாளராய் வாழ்ந்தவர். பத்துப்பாட்டு முதல் பாரதியார் பாடல்கள் வரை ஆராய்ந்து தெளிந்த கட்டுரைகள் எழுதியவர்.
விரைவான உண்மைகள் வித்துவான் க. வேந்தனார், பிறப்பு ...
வித்துவான் க. வேந்தனார் | |
---|---|
![]() | |
பிறப்பு | நாகேந்திரம்பிள்ளை (1918-11-05)5 நவம்பர் 1918 வேலணை, யாழ்ப்பாணம் |
இறப்பு | செப்டம்பர் 18, 1966(1966-09-18) (அகவை 47) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | வித்துவான் (சென்னைப் பல்கலைக்கழகம்) பண்டிதர் (மதுரைத் தமிழ்ச் சங்கம்) |
பணி | தமிழாசிரியர் |
பெற்றோர் | கனகசபைப்பிள்ளை, தையல்முத்து |
பிள்ளைகள் | கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளம்வேள் |
வலைத்தளம் | |
வேந்தனார்.கொம் |
மூடு