ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு
From Wikipedia, the free encyclopedia
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010, சூன் 23 ஆம் நாளிலிருந்து சூன் 27 வரை நடைபெற்றது. இதே காலப்பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு இவ்விணைய மாநாட்டை நடத்தியது.