என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை
From Wikipedia, the free encyclopedia
என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. இவர் எழுதியனவாகச் சொல்லப்பெரும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்பன இப்பொழுது கிடைத்தில. இரட்சணிய மனோகரத்தின் பெரும்பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றது ஆகும். ஆகையால் இவரை கிருத்துவக் கம்பர் என்று அழைத்தனர்.
விரைவான உண்மைகள் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை, இயற்பெயர் ...
என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை | |
---|---|
இயற்பெயர் | என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை |
பிறப்பு | (1827-04-23)23 ஏப்ரல் 1827 கரையிருப்பு (அல்லது) ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 3 பெப்ரவரி 1900(1900-02-03) (அகவை 72) திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
தொழில் | தமிழாசிரியர், எழுத்தாளர் |
கருப்பொருள் | கிறித்தவம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இரட்சணிய யாத்திரிகம் (பதிப்பு- 1894) |
மூடு