இசுரயேலர்
From Wikipedia, the free encyclopedia
இந்த கட்டுரை விவிலிய இசுரயேலரைப் பற்றியது. இப்பெயரிலுள்ள நாடு பற்றி அறிய இசுரேல் கட்டுரையை பார்க்க.
இசுரயேலர் அல்லது இசுரவேலர் என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும். ஆதியாகமம் 32:28 [1] இல் கடவுள் யாக்கோபின் பெயரை இசுரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. விவிலியத்தில் கூறப்பட்டுள்ளப்படி இசுரயேலர் எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும்.
இசுரவேலரின் 12 குலங்களுக்கும் யாக்கோபின் 12 மகன்மாரது பெயர் சூட்டப்பட்டது. அவைகளாவன உரூபன், சிமியோன், இலேவி, இயூதா, இசாக்கர், செபுலோன், தான், காத்து, நெபதலி, அசேர், இயோசேப்பு, மற்றும் பெஞ்சமின் என்பனவாகும்.