இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை
From Wikipedia, the free encyclopedia
இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) என்பது இனப்படுகொலையை வரையறை செய்து, தடைசெய்யும் உடன்படிக்கை ஆகும். இப்போது 137 நாடுகளில் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் பங்கு பெற்று சகல நாடுகளும் இன ஒழிப்பைத் தவிர்க்கவும், யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் இவற்றைத் தண்டிக்கவும் வேண்டுமென இந்த ஒப்பந்தம 1951 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.