![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Arumuka_Navalar.jpg/640px-Arumuka_Navalar.jpg&w=640&q=50)
ஆறுமுக நாவலர்
From Wikipedia, the free encyclopedia
ஆறுமுக நாவலர் (Āṟumuka Nāvalar, 18 திசம்பர் 1822 – 5 திசம்பர் 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
விரைவான உண்மைகள் ஆறுமுக நாவலர், பிறப்பு ...
ஆறுமுக நாவலர் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆறுமுகன் (1822-12-18)18 திசம்பர் 1822 நல்லூர் (யாழ்ப்பாணம்), பிரித்தானிய இலங்கை |
இறப்பு | திசம்பர் 5, 1879(1879-12-05) (அகவை 56) நல்லூர் (யாழ்ப்பாணம்), பிரித்தானிய இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பதிப்பாளர், சைவபிரசங்கர், கல்விசாலை நிறுவனர், எழுத்தாளர் |
அறியப்படுவது | சைவசமயசமுக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் |
சமயம் | சைவம் |
வாழ்க்கைத் துணை | பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் |
மூடு