சோவியத்–ஆப்கான் போர்
From Wikipedia, the free encyclopedia
ஆப்கான் சோவியத் போர் (திசம்பர் 1979 - பெப்ரவரி 1989) என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற முகாசிதீன் எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாவும் கொள்ளப்படுவதுண்டு. முன்னதாக 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு ஆப்கானித்தான் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரணமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான முகாசிதீகளுக்கு அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் ஐக்கிய இராச்சியம், சவுதி அரேபியா, பாக்கித்தான், எகிப்து, சீனா ஆகிய நாடுகளும் முகாசிதீன்களை ஆதரித்தன.[2][3][4][8][23] பணம், ஆயுதம், போர் பயிற்சி என பல உதவிகளை இந்த நாடுகள் முகாசிதீகளுக்கு அளித்தன. இதனைத் தொடர்ந்து, இவர்களை ஒடுக்க உதவுமாறு ஆப்கன் சனநாயக குடியரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, சோவியத் ஒன்றியம் தனது 40வது படைப்பிரிவை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வைத்தது. இதுவே ஆப்கான் சோவியத் போரின் ஆரம்பம் ஆகும்.
ஆப்கான் சோவியத் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர் பகுதி | |||||||
கடிகாரச்சுற்றில் மேலிருந்து கீழாக-போரின் போது ஒரு சோவியத் வீரர் (1988); குனார் பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் முகாசிதீன் வீரர்கள் (1987); அமெரிக்க சனாதிபதி ரீகனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முகாசிதீன் தலைவர்கள்; தாக்குதலுக்கான திட்டமிடலில் ஈடுபடும் செப்ட்னாசு (சோவியத் சிறப்பு படையணி) வீரர்கள் (1988) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சோவியத் ஒன்றியம் | முகாசிதீன்
பாக்கித்தான் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
லியோனிட் பிரெசினெவ் யூரி அன்றோபவ் கான்சுடன்டைன் செர்னேகோ மிக்கைல் கொர்பசோவ் டிமிட்ரி உசுதினோவ் செர்கே சொகோலோவ் டிமிட்ரி யாசோவ் வேலன்டின் வாரன்னிகோவ் ஐகோர் ரோடியோனோவ் போரிசு குரோமோவ் ஹஃபிசுல்லா அமீன் பாப்ரக் கர்மல் முகமது நசிபுல்லா அப்துல் ரசீத் தோசுதும் அப்துல் காதிர் தகர்வால் சாநவாசு தனை முகம்மது ரபி | அகமது சா மசூத் அப்துல் ஃகக் அப்துல்லா அஃசாம் இசுமாயில் கான் குல்புத்தீன் யக்மதைர் சலாலுதீன் அக்கானி முல்லா நகீப் அப்துல் ரகுமான் வர்தக் பசல் ஃகக் முசாகித் புர்ஹானுத்தீன் ரப்பானி உசாமா பின் லாதின் |
||||||
பலம் | |||||||
சோவியத் படைகள்
ஆப்கன் படைகள்
| முகாசிதீன் | ||||||
இழப்புகள் | |||||||
சோவியத் படைகள்:
14,453 பேர் கொல்லப்பட்டனர் (மொத்தம்)
53,753 பேர் காயமடைந்தனர்[16] 265 பேர் கானாமல் போயினர்[17] ஆப்கன் படைகள்: 18,000 பேர் கொல்லப்பட்டனர்[18] | முகாசிதீன்:
75,000–90,000 வரை கொல்லப்பட்டனர், 75,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் (தோராய மதிப்பீடு)[19] |
||||||
பொதுமக்கள் (ஆப்கன்):
850,000–1,500,000 பேர் கொல்லப்பட்டனர்[20][21] 5 மில்லியன் அகதிகள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்தனர் 2 மில்லியன் மக்கள் கானாமல் போயினர் 3 மில்லியன் பொதுமக்கள் காயமடைந்தனர்[22] பொதுமக்கள் (சோவியத் ஒன்றியம்): 100 பேர் வரை மரணம் |
15 பெப்ரவரி 1989ல், மிக்கைல் கொர்பசோவ் தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் காரணமாக 8,50,000 முதல் 15,00,000 வரையிலான ஆப்கானிய குடிமக்கள் உயிரினந்தனர். 20,00,000 அதிகமானோர் காணாமல் போனதுடன், 10 மில்லியன் மக்கள் பாக்கித்தான் மற்றும் இரான் நாடுகளில் அகதிகளாகக் குடிபெயர்ந்தனர். போர் முடிவுக்கு வந்தபிறகும் கூட ஆப்கான் அரசுக்கும் முசாகிதீன் அமைப்பினருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சரிவைச் சந்தித்தது.