அரசு சார்பற்ற அமைப்பு
From Wikipedia, the free encyclopedia
அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.
பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 4,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,00,000 (32 இலட்சம்) அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.[1]இந்தியாவின் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைளைவிட கூடுதலாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயகுவதாகவும், நகர்புறங்களில் 1,000 மக்களுக்கு 4 அரசு சார்பற்ற அமைப்புகளும்; கிராமப்புறங்களில் 1,000 நபர்களுக்கு 2.3 தொண்டு நிறுவனகள் இயங்குகிறது. அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது.