அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் (நூல்)
From Wikipedia, the free encyclopedia
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் என்பது ஒய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய நூல் ஆகும். இந்த நூலுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வெ. இறையன்பு அணிந்துரை எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...
![]() | |
நூலாசிரியர் | கே.சந்துரு |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியீட்டாளர் | மணற்கேணி பதிப்பகம் |
மூடு
ஆறு ஆண்டுகளுக்கு மேல் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பணிக் காலத்தில் சாதி, சமயம், தீண்டாமை, வன்கொடுமை, தலித் மக்களின் வாழ்வுரிமை ஆகியன தொடர்பான பல வழக்குகளை உசாவி, ஆய்வு செய்து தீர்ப்புகள் வழங்கும் வாய்ப்புகள் பெற்ற சூழ்நிலையில் நீதிபதி சந்துரு இந்த நூலை எழுதியுள்ளார். அம்பேத்கரின் எழுத்துகளும் பேருரைகளும் பல சிக்கலான வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லத் தனக்கு வழிகாட்டின என்று நீதிபதி சந்துரு தம் முன்னுரையில் வரைந்துள்ளார்.