அந்தால்யா மாகாணம்
துருக்கியியன் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அந்தால்யா மாகாணம் (Antalya Province, துருக்கியம்: Antalya ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியியல் தாரசு மலைத்தொடர் மற்றும் மத்திய தரைக்கடல் கடலுக்கு இடையில், தென்மேற்கு துருக்கியின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது.
துருக்கியின் சுற்றுலாத் துறையின் மையமாக அந்தால்யா மாகாணம் உள்ளது. இப்பகுதியானது துருக்கிக்குவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 30% பயணிகளை ஈர்க்கிறது. இதே பெயரில் உள்ள இதன் தலைநகரமானது 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கை பின்னுக்குத்தள்ளி சர்வதேச பயணிகளின் வருகையின் எண்ணிக்கையால் உலகின் மூன்றாவது அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாக இடம்பிடித்தது. அந்தால்யா துருக்கியின் மிகப்பெரிய சர்வதேச கடற்கரை உல்லாச நகரம் ஆகும். அந்தால்யா மாகாணமானது கிழக்கில் உள்ள பண்டைய பம்பிலியா மற்றும் மேற்கில் உள்ள லைசியா ஆகியவற்றுக்கு இணைப்புப் பகுதியாக உள்ளது. இந்த மாகாணமானது 657 km (408 mi) கடற்கரையுடன், உலக பாரம்பரிய தளமான சாந்தோஸ் உட்பட கடற்கரைகள், துறைமுகங்கள் மற்றும் பண்டைய நகரங்கள் போன்றவற்றை பரவலாக கொண்டுள்ளது. மாகாண தலைநகரான ஆந்தாலியா 1.001.318 மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.
துருக்கியில் வேகமாக வளர்ந்து வரும் மாகாணம் அந்தால்யா; 1990-2000 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு 4.17% மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கொண்டதாக உள்ளது. இது தேசிய விகிதமான 1.83% உடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இந்த வளர்ச்சியானது நகரமயமாக்கலின் வேகமான வளர்ச்சியால், குறிப்பாக சுற்றுலா மற்றும் கடற்கரையில் உள்ள பிற சேவைத் துறைகளால் சாத்தியமானது.