![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Raja_sir_Annamalai_Chettiar.jpg/640px-Raja_sir_Annamalai_Chettiar.jpg&w=640&q=50)
மு. அண்ணாமலை
தமிழக தொழிலதிபர் / From Wikipedia, the free encyclopedia
இராஜா சர் திவான் பகதூர் சா.இராம.மு.அண்ணாமலை செட்டியார் (Raja Sir Diwan Bahadur Satappa Ramanatha Muttaiya Annamalai Chettiar) சுறுக்கமாக இராஜா அண்ணமலை செட்டியார், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர் ஆவார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர். பெரும் வள்ளல். செட்டிநாட்டு இராஜா என்னும் பரம்பரைப் பட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.[1]
விரைவான உண்மைகள் இராஜா சர்அண்ணாமலை செட்டியார், பிறப்பு ...
இராஜா சர் அண்ணாமலை செட்டியார் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1881-09-29)29 செப்டம்பர் 1881 கானாடுகாத்தான், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 15 சூன் 1948(1948-06-15) (அகவை 66) சென்னை, இந்தியா |
இருப்பிடம் | செட்டிநாடு அரண்மனை |
பணி | தன வணிகம் |
அறியப்படுவது | நிறுவனர் - அண்ணாமலை பல்கலைக்கழகம் |
பட்டம் | இராஜா சர்
திவான் பகதூர் செட்டிநாட்டு அரசர் தமிழிசை காவலர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | சா. இராம. முத்தையா செட்டியார் (தந்தை) மீனாட்சி ஆச்சி (தாய்) |
வாழ்க்கைத் துணை | இராணி சீதை ஆச்சி |
பிள்ளைகள் | மு. அ. முத்தையா செட்டியார், மு. அ. இராமநாதன் செட்டியார், மு. அ. சிதம்பரம், லெ. சித. லெ. பழ. இலக்குமி ஆச்சி |
மூடு
தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.[2]
சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.