அடிகளாசிரியர்
From Wikipedia, the free encyclopedia
அடிகளாசிரியர் என்று பரவலாக அறியப்படும் குருசாமி (ஏப்ரல் 17, 1910 (பிறப்பு தமிழ் நாட்காட்டியில்: 1910 சாதாரண ஆண்டு சித்திரை 5 ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை) - சனவரி 8, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். 2011ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ் பணிக்காக 2005 - 2006 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர்.
விரைவான உண்மைகள் அடிகளாசிரியர், பிறப்பு ...
அடிகளாசிரியர் | |
---|---|
அடிகளாசிரியர் | |
பிறப்பு | குருசாமி ஏப்ரல் 17, 1910 கூகையூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு |
இறப்பு | சனவரி 8, 2012(2012-01-08) (அகவை 101) |
தேசியம் | இந்தியர் |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
சமயம் | வீர சைவம் |
பெற்றோர் | பெரியசாமி ஐயர், குங்கும அம்மாள் |
வாழ்க்கைத் துணை | சம்பத்து |
பிள்ளைகள் | பேராசிரியர் (மறைவு), இளங்கோவன், நச்சினார்க்கினியன், சிவபெருமான், திருநாவுக்கரசி, குமுதவல்லி, செந்தாமரை, சிவா (மறைவு) |
மூடு