From Wikipedia, the free encyclopedia
மூலப்பட்டறை (ஆங்கில மொழி: Moolapatrai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
மூலப்பட்டறை
Moolapatrai மூலப்பட்டறை | |
---|---|
ஆள்கூறுகள்: 11.351200°N 77.722700°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 199 m (653 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
வாகனப் பதிவு | TN-56 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, பிராமண பெரிய அக்கிரஹாரம், பெருமாள்மலை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், மூலப்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | காலியிடம் |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 199 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலப்பட்டறை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.351200°N 77.722700°E (அதாவது, 11°21'04.3"N, 77°43'21.7"E) ஆகும். ஈரோடு, பிராமண பெரிய அக்கிரஹாரம், பெருமாள்மலை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், மூலப்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகியவை மூலப்பட்டறை பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
பிப்ரவரி 27, 2023 அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் மூலப்பட்டறை பகுதியும் ஒன்றாகும்.[3]
மூலப்பட்டறை பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா காலமாகி விட்டதால், இத்தொகுதிக்கு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.