மகேஷ் யோகி

From Wikipedia, the free encyclopedia

மகேஷ் யோகி

மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, 12 சனவரி 191?[குறிப்பு 1] - 5 பெப்ரவரி 2008), ஆழ்நிலைத் தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா[7], மெக்சிக்கோ[8], ஐக்கிய இராச்சியம்[9], சீனா[10] உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.[7]

விரைவான உண்மைகள் மகரிசி மகேசு யோகி Maharishi Mahesh Yogi, பிறப்பு ...
மகரிசி மகேசு யோகி
Maharishi Mahesh Yogi
Thumb
1978 இல் மகேசு யோகி
பிறப்பு12 சனவரி 191?[குறிப்பு 1]
இராசிம், மத்திய மாகாணம், பேரர், இந்தியா (இன்றைய சத்தீசுகர், இந்தியா)[1]
இறப்பு (அகவை 89–98)
வுலோதுரோப், இலிம்பர்க், நெதர்லாந்து
இயற்பெயர்மகேசு பிரசாத் வர்மா
சமயம்இந்து
நிறுவனர்
தத்துவம்ஆழ்நிலை தியானம்
குருபிரமானந்தா சரசுவதி
மூடு

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரசுவதி சுவாமிகளின் சீடராகி[11], 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தைப் போதித்து வந்தார்.

மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்[12]. 1960-களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்குக் குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.

1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்[13].

குறிப்புகள்

  1. மகரிசி மகேசு யோகியின் பிறந்த ஆண்டு உறுதிப்படுத்தப்படவில்லை, பல்வேறு மூலங்கள் 1911,[2] 1917,[3][4] அல்லது 1918[5][6] என்று கூறுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.