மகேஷ் யோகி
From Wikipedia, the free encyclopedia
மகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, 12 சனவரி 191?[குறிப்பு 1] - 5 பெப்ரவரி 2008), ஆழ்நிலைத் தியானத்தை இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா[7], மெக்சிக்கோ[8], ஐக்கிய இராச்சியம்[9], சீனா[10] உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.[7]
மகரிசி மகேசு யோகி Maharishi Mahesh Yogi | |
---|---|
1978 இல் மகேசு யோகி | |
பிறப்பு | 12 சனவரி 191?[குறிப்பு 1] இராசிம், மத்திய மாகாணம், பேரர், இந்தியா (இன்றைய சத்தீசுகர், இந்தியா)[1] |
இறப்பு | (அகவை 89–98) வுலோதுரோப், இலிம்பர்க், நெதர்லாந்து |
இயற்பெயர் | மகேசு பிரசாத் வர்மா |
சமயம் | இந்து |
நிறுவனர் |
|
தத்துவம் | ஆழ்நிலை தியானம் |
குரு | பிரமானந்தா சரசுவதி |
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரசுவதி சுவாமிகளின் சீடராகி[11], 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தைப் போதித்து வந்தார்.
மகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்[12]. 1960-களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்குக் குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.
1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்[13].
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.