பொதியம்

From Wikipedia, the free encyclopedia

பொதியம்

பொதிகை மலை (Pothigai) என்பது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆனைமலைத் தொடாில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு

விரைவான உண்மைகள் அகத்தியர் மலை (அசம்புமலை), உயர்ந்த புள்ளி ...
அகத்தியர் மலை (அசம்புமலை)
Thumb
இந்த மலையில் உள்ள 26 மலைச் சிகரங்களில் உயரமான அகத்தியர்மலை 1,600 மீட்டர்கள் (5,200 அடி)
உயர்ந்த புள்ளி
உயரம்1,868 m (6,129 அடி)
புடைப்பு1,668 m (5,472 அடி)
பட்டியல்கள்
ஆள்கூறு8°39′N 77°13′E
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புமருந்து தயாரிப்பாளர் மலை
பெயரின் மொழிதமிழ்
புவியியல்
அமைவிடம்கேரளம் & தமிழ்நாடு
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
அமைப்பியல் வரைபடம்திருவனந்தபுரம் பகுதி வரைபடம்
நிலவியல்
பாறையின் வயதுCenozoic, 100 to 80 mya
மலையின் வகைFault Description
ஏறுதல்
எளிய வழிtrekking via Peppara Wildlife Sanctuary
மூடு
விரைவான உண்மைகள் பொதிகை மலை, உயர்ந்த புள்ளி ...
மூடு

புவியமைப்பு

பொதிகை மலை கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்திலும், ஒருபகுதி தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இதன் உயரம் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி ஆறு உருவாகிறது.

சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர்.
சங்ககாலத்தில் வையை என வழங்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் வழங்குவது போன்றது இது.
வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். [1]

ஆண்ட அரசர்கள்

ஆய், திதியன்
சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய்[2], திதியன்[3] ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர்.
நெடுஞ்செழியன் வெற்றி
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இந்தப் பொதியமலை நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான்.[4]
தென்னவன்
தென்னவன் என்னும் பாண்டியன் இதனை ஆண்ட காலமும் உண்டு. இவனது பொதியில் நாட்டில் நீர் கொட்டிய அருவி குற்றாலம்.[5]
கோசர்
கோசர் என்னும் குடிமக்கள் இங்கு வந்து பறையறைந்து அரசனுக்காக வரி தண்டினர்.[6][7]

மலைவளம்

சந்தனம்
பொதியமலையில் சந்தன மரங்கள் அதிகம். அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை.[8]
காந்தள்
காந்தள் மலர் மிகுதி.[9]
அன்னம்
ஆய் அரசன் ஆண்ட பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாட்டுக் காட்டும்.[10]

பொதுவான ஊர்ச்சாவடி

பொதியில் என்பது ஊர்மக்களின் பொதுவான இல்லமாகிய ஊர்ச்சாவடியைக் குறிக்கும். இங்கு நடப்பட்டிருந்த கந்தம் என்னும் தூணில் கடவுள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினர்.[11]
வயது முதிர்ந்தவர்கள் இங்கு அமர்ந்துகொண்டு வல் என்னும் சூது விளையாடுவர். இந்த விளையாட்டுக்கு நாய் என்னும் கல்லுக்காய் பயன்படுத்தப்படும்.[12][13] இதனை வல்லநாய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[14]
ஊர்மக்கள் குடிபெயர்ந்துவிட்டால் இந்தப் பொதியில் கறையான் அரித்துப் பாழ்பட்டுக் கிடக்கும்.[15]

கடவுள் பொதியில்

பொதினியில்
பொதினி எனப்பட்ட பழனியில் இருந்த பொதியிலில் முருகு தெய்வம் குடிகொள்ளும்.[16]
புகார் நகரில் பொதியில்
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பொதியில் தூணில் பெண்யானைகளைக் கட்டி ஆண்யானையை ஏறவிடுவர்.[17]

பொதிகைமலை யாத்திரை

Thumb
அகத்திய மலை உச்சியில் உள்ள அகத்தியர் சிலை

பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன. இந்த மலையின் உச்சியில் அகத்தியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல, வாகனங்கள் செல்ல முடியாத அடர் வனத்தின் வழியே, இரண்டு நாள் இரவு, மூன்று நாள் பகல் என்று கடுமையான நடைபயண யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். 1995 ஆண்டுக்கு முன்வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது. இதனால் மலையின் மறுபக்கத்தில் உள்ள திருவனந்தபுரம் வழியாக பொதிகை யாத்திரை செல்ல, கேரள வனத்துறை அனுமதிக்கிறது. இணையம் மூலம் முன்பதிவு செய்பவர்களிடம், உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி பெற்ற காணிகள் துணையுடன் கேரள வனத்துறை பொதிகைக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிவராத்திரி வேளையிலும், அதன்பின், மே மாதத்தில் மட்டும் இப்பயணத்தை கேரள வனத்துறை அனுமதிக்கிறது. தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்தியரை வேண்டி, பக்தர்கள் அங்கு சிறப்பு பூசைகள் நடத்துவர்.[18]

அடிக்குறிப்பு

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.