இத்தாலிய அறிஞரும் கவிஞருமாவார் From Wikipedia, the free encyclopedia
பிரான்செசுகோ பெட்ரார்கா ( Francesco Petrarca ) ( 20 சூலை 1304 - 19 சூலை 1374 ) பொதுவாக பெட்ராக் என அறியப்படும் இவர், ஆரம்பகால இத்தாலிய மறுமலர்ச்சியின் அறிஞரும், கவிஞரும் மற்றும் ஆரம்பகால மனிதநேயவாதிகளில் ஒருவருமாவார். [1]
பிரான்செசுகோ பெட்ரார்கா | |
---|---|
பெட்ராக்கின் ஓவியம், அண். 1370–1380 | |
பிறப்பு | பிரான்செசுகோ பெட்ரார்கா 20 சூலை 1304 அரிசோ |
இறப்பு | 19 சூலை 1374 69) அர்கா பெட்ரார்க்கா | (அகவை
அடக்கத்தலம் | அர்கா பெட்ரார்க்கா |
தொழில் |
|
மொழி | |
தேசியம் | அரிசோனியர் |
கல்வி | சட்டம் |
கல்வி நிலையம் |
|
காலம் | ஆரம்பகால இத்தாலிய மறுமலர்ச்சிக் காலம் |
வகைகள் |
|
கருப்பொருள்கள் |
|
இலக்கிய இயக்கம் |
|
குறிப்பிடத்தக்க விருதுகள் | உரோமின் சிறந்த கவிஞர் விருது, 1341 |
பிள்ளைகள் | ஜியோவானி (1337–1361) பிரான்செசுகா (பிறப்பு 1343) |
பெற்றோர் | செர் பெட்ராக்கா(தந்தை) எலெட்டா கானிஜியானி(தாயார்) |
குடும்பத்தினர் | கெராடோ பெட்ராக்கா (சகோதரன்) ஜியோவானி பக்காசியோ(நண்பர்) |
சிசெரோவின் கடிதங்களை பெட்ராக் மீண்டும் கண்டுபிடித்த பின்னர், 14 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய மறுமலர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி மனிதநேயத்தை நிறுவுவதற்கு காரணமாக அமைந்தது. [2] 16 ஆம் நூற்றாண்டில், பீட்ரோ பெம்போ என்பார் நவீன இத்தாலிய மொழிக்கான மாதிரியை பெட்ராக்கின் படைப்புகளிலிருந்தும், ஜியோவானி போக்காசியோ மற்றும் டான்டே அலிகியேரியின் படைப்புகளிலிருந்தும் உருவாக்கினார். [3] பெட்ராக் பின்னர் இத்தாலிய பாணியின் மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டார்.
பெட்ராக்கின் பாடல்வரிகள் மறுமலர்ச்சியின் போது ஐரோப்பா முழுவதும் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டு பாடல் கவிதைகளுக்கு ஒரு மாதிரியாக மாறியது. " இருண்ட காலம் " என்ற கருத்தை முதன்முதலில் உருவாக்கியவர் என்றும் இவர் அறியப்படுகிறார். [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.