பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XVI; 18 செப்டம்பர் 1765 – 1 ஜூன் 1846, இயற்பெயர்: பர்த்தலமேயோ அல்பேர்த்தோ கப்பெல்லாரி) என்பவர் காமல்டோலேஸ் என்னும் புனித ஆசிர்வாதப்பர் சபைத் துறவியும் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 2 பெப்ரவரி 1831 முதல் 1846இல் தனது இறப்பு வரையும் இருந்தவர் ஆவார்.[1] இவர் துறவற சபையில் இணைந்த போது மௌரோ என்னும் பெயரைத் தனது துறவுப்பெயராக ஏற்றார். இவர் மிகவும் அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்தார். திருத்தந்தை நாடுகளிலும் ஐரோப்பாவிலும் பரவிய மக்களாட்சியினை இடதுசாரி புரட்சியின் முன்னோட்டமாக இவர் பார்த்ததால் அதனை இவர் எதிர்த்தார்.
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி | |
---|---|
![]() | |
தேர்வு | 2 பெப்ரவரி 1831 |
ஆட்சி துவக்கம் | 6 பெப்ரவரி 1831 |
ஆட்சி முடிவு | 1 ஜூன் 1846 |
முன்னிருந்தவர் | எட்டாம் பயஸ் |
பின்வந்தவர் | ஒன்பதாம் பயஸ் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1787 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 6 பெப்ரவரி 1831 பர்த்தலமேயோ பாக்கா-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 13 மார்ச் 1826 பன்னிரண்டாம் லியோ-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பர்த்தலமேயோ அல்பேர்த்தோ கப்பெல்லாரி |
பிறப்பு | Belluno, வெனிஸ் குடியரசு | 18 செப்டம்பர் 1765
இறப்பு | 1 சூன் 1846 80) உரோம், திருத்தந்தை நாடுகள் | (அகவை
வகித்த பதவிகள் |
|
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
கிரகோரி என்னும் பெயர் ஏற்ற கடைசித் திருத்தந்தையும் ஆயரல்லாத ஒருவர் திருத்தந்தையாகத் தேர்வான கடைசித் திருத்தந்தையும் இவர் ஆவார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.