நெல்லியடி மத்திய கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
நெல்லியடி மத்திய கல்லூரி (Nelliady Central College) (முன்பு, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் (Nelliady Madhya Maha Vidyalayam)) யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடியில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இது இலங்கையின் தேசியப் பாடசாலைகளுள் ஒன்றாகும்.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
நெல்லியடி மத்திய கல்லூரி Nelliady Central College | |
---|---|
![]() | |
முகவரி | |
நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதி நெல்லியடி, இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம் | |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை |
குறிக்கோள் | அறிவு ஒளிர, சால்பு சிறக்க! |
நிறுவல் | 1921 |
முதல்வர் | கணேசரத்தினம் கிருஸ்ணகுமார் |
ஆசிரியர் குழு | 125 |
தரங்கள் | 6-13 |
பால் | ஆண், பெண் |
கற்பித்தல் மொழி | தமிழ் ஆங்கிலம் |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
Publication | சிந்தனை |
ஆண்டு இதழ் | நெல்லிக்கனி |
இணையம் | http://www.nelliadycentral.com |
ஆரம்பம்
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 1921ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
வரலாறு
1946ஆம் ஆண்டில் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவினால் 54 பாடசாலைகள் மத்திய மகா வித்தியாலயங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. அவற்றுள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் ஒன்றாகும்.[1] பின்னர், முன்னை நாள் அதிபர் திரு. செல்லத்துரை சேதுராஜா காலத்தில் அக்டோபர் 6, 2011இலிருந்து இக்கல்லூரியானது தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.[2]
ஈழப் போரின்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெரும்பாலான பள்ளிகளைப் போலவே இந்தக் கல்லூரியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஈழப்போரின்போது இக்கல்லூரியில் இலங்கை இராணுவம் நிலை கொண்டு அதன் முகாமாக பயன்படுத்தியது. 1987 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி இலங்கை இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் நெல்லியடி சமர் மேற்கொள்ளபட்டது. அப்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சிறிய ட்ரக் வண்டியை கப்டன் மில்லர் ஓட்டிச் சென்று, இலங்கையின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் இப்பாடசாலையில் நகழ்த்தப்பட்டது.[3][4]
இங்கு படித்தவர்கள்
- ஏ. கே. கருணாகரன், கருநாடக இசைப் பாடகர்
- நெல்லை க. பேரன், எழுத்தாளர்
- த. ஆனந்தமயில், எழுத்தாளர்
- கி. சிவநேசன், அரசியல்வாதி
- செ. யோகராசா, எழுத்தாளர்
பாடசாலைப் பண்
"வாழ்க வாழ்க வாழ்கவே..." இயற்றியவர பண்டிதர் க. வீரகத்தி
பல்லவி
வாழ்க வாழ்க வாழ்கவே
எங்கள் கலைக் கோயிலென்றும்
வாழ்க வாழ்க வாழ்கவே
அனுபல்லவி
நெல்லியடி மத்தியகல்லூரியாலயம்
நிகரில்லாத கலையினூற்று குருகுலபீடம்
சரணம்
கண்விழித்த கமலமன்னர்
கவர்ச்சிபொங்கும் பார்வையும்
மெள்ள மெள்ள சொரிந்து நிற்கும்
மேன்மைமிக்க குரவர்கள்
செல்வமென்று போற்றுமெங்கள்
உயிரில்வாழும் செந்தமிழ்
அல்லல் நீக்கி ஆடசிகாண
அருள் வழங்கும் வாணியாய்
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.