தண்டி
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
தண்டி (Dandi), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் , நவ்சாரி நகரை ஒட்டி அமைந்த கடற்கரை கிராமம்.
1930ஆம் ஆண்டில், உப்பு மீதான வரியை நீக்கக் கோரி, பிரித்தானிய அரசுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியடிகள் தலைமையில், அகமதாபாத் நகரத்திலிருந்து தண்டி கடற்கரை கிராமம் வரை தொடர்ந்து 24 நாட்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து, தண்டி கடற்கரையில் உப்பை அள்ளினார்.[1]. காந்தியடிகளின் தண்டி யாத்திரை நினைவாக இந்திய அரசு, சபர்மதி முதல் தண்டி வரை செல்லும் சாலையைச் சுற்றுலா மையமாக்க முடிவு செய்துள்ளது.[2][3]
காந்தி அடிகளின் தண்டி உப்புச் சத்தியாகிரகம் போராட்டத்தினை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் எழுப்ப அரசு முடிவு செய்துள்ளது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.