ஜலவர்

இராசத்தான் மாநில நகரம் From Wikipedia, the free encyclopedia

ஜலவர் (Jhalawar) என்பது, இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது முன்னாள் சுதேச மாநிலமான ஜலாவரின் தலைநகராக இருந்தது. மேலும் ஜலவர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக உள்ளது. ஜலவர் ஒரு காலத்தில் பிரிஜ்நகர் என்று அழைக்கப்பட்டது. [1] [2]

வரலாறு

ஜலவார் நகரம் ஒரு ராஜ்புத் ஜலா ஜலிம் சிங் என்பவரால் நிறுவப்பட்டது, [3] அவர் அப்போது கோட்டா மாநிலத்தின் திவானாக இருந்தார் (கி.பி 1791). அவர் இந்த நகரத்தை நிறுவினார். பின்னர் சாவோனி உமேத்புரா என்று அழைக்கப்பட்டார். இது ஒரு பாசறையாக இருந்தது. அடர்த்தியான காடுகள் மற்றும் வனவிலங்குகளால் சூழப்பட்டதாக இந்த நகரம் இருந்தது.

ஜாலா சலீம் சிங் அடிக்கடி வேட்டைக்காக இங்கு வந்தார். அவர் இந்த இடத்தை மிகவும் விரும்பினார். இதை ஒரு நகரமாக மாற்ற விரும்பினார். மராத்தா படையெடுப்பாளர்கள் இந்த மைய இடத்தின் வழியாக மால்வாவிலிருந்து கோட்டா நோக்கி ஹடோடி மாநிலங்களை கைப்பற்றுவதற்காக சென்றனர். அதனால் இந்த இடத்தை இராணுவ பாசறையாக அபிவிருத்தி செய்வதற்கான நோக்கம் ஏற்பட்டது.

ஜலா சலீம் சிங் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ஒரு இராணுவ பாசறை மற்றும் நகரமாக உருவாக்கத் தொடங்கினார். இதனால் அவர் இந்த இடத்தைப் பயன்படுத்தி மராட்டிய படையெடுப்பாளர்கள் கோட்டா மாநிலத்தை அடைவதற்கு முன்பே அவர்களைத் தாக்கி நிறுத்த முடியும். கி.பி. 1803-04 ஆம் ஆண்டில் சவோனி உமேத்புரா அவர்களால், இந்த இடம் பாசறை மற்றும் நகரமாக உருவாக்கப்பட்டது. 1821 டிசம்பரில் இப்பகுதிக்கு விஜயம் செய்த கர்னல் டோட், இந்த பகுதியை ஜலா சலீம் சிங் நிறுவிய பாசறை என்றும், பெரிய வீடுகள், தங்கும் அறைகள் மற்றும் சுற்றியுள்ள சுவர்களைக் கொண்ட நன்கு நிறுவப்பட்ட நகரம் என்றும் விவரித்தார். .

கி.பி 1838 இல், ஆங்கில ஆட்சியாளர்கள் ஜலவர் மாநிலத்தை கோட்டா மாநிலத்திலிருந்து பிரித்து ஜலா சலீம் சிங்கின் பேரனான ஜாலா மதன் சிங்குக்குக் கொடுத்தனர். ஜலவர் மாநிலத்தை அபிவிருத்தி செய்வதற்காக தனது நிர்வாக சேவைகளை உருவாக்கினார். அவர் ஜலாரா படானில் நீண்ட காலம் வசித்து வந்தார், கர் அரண்மனையை (கி.பி 1840 - 1845) கட்டத் தொடங்கினார். ஜலாவர் மாநிலத்தின் முதல் ஆட்சியாளராக இருந்த அவர், ஜலவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். ஜாலா மதன் சிங் 1838 முதல் 1845 வரை ஜலாவரை ஆட்சி செய்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, ஜலா பிருத்வி சிங் ஜலாவரின் ஆட்சியாளரானார், மேலும் இவர், சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

1899 முதல் கி.பி 1929 வரை ஜலவர் மாநிலத்தை ஆண்ட ராணா பவானி சிங் ஜி, ஜலவர் மாநிலத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்தார். சமூக நடவடிக்கைகள், பொதுப்பணி (கட்டுமானம்), கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் அவரது தீவிர ஈடுபாடு இருந்தது.

படான் அல்லது ஜலாரா படான் என்றும் அழைக்கப்படும் ஜலாவரின் பிரதான நகரம், பெயரிடப்பட்ட சுதேச அரசின் வர்த்தக மையமாக இருந்தது. இதன் முக்கிய ஏற்றுமதிகள் ஓபியம், எண்ணெய் விதைகள் மற்றும் பருத்தி போன்றவை ஆகும். அரண்மனை ஊருக்கு வடக்கே, நான்கு மைல் (6 கி.மீ) . தொலைவில் அமைந்துள்ளது. நகருக்கு அருகில் ஒரு விரிவான அழிவை மேற்கொண்ட பண்டைய நகரமான சந்திராவதி உள்ளது. இது, அவுரங்கசீப் . அரசரால் அழிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதன் எச்சங்களின் மிகச்சிறந்த அம்சமாக, சீதலேஸ்வர் மகாதேவாவின் கோயில் (சி. 600) உள்ளது.

கல்வி

ஜலவர் மாவட்டத்தில் நன்கு வளர்ந்த கல்வி உள்கட்டமைப்பு உள்ளது. [4] தொடக்கக் கல்வித் துறை மற்றும் இடைநிலைக் கல்வித் துறை ஆகியவை தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மூலம் தங்கள் சேவைகளை வழங்குகின்றன. ராஜஸ்தான் அரசு நடத்தும் ராஜீவ் காந்தி பாடசாலா (பள்ளி) திட்டமும் ஆரம்பக் கல்வியை வழங்குவதற்காக மாவட்டத்தில் இயங்கி வருகிறது.

மாவட்டத்தில் எட்டு கல்லூரிகள் உள்ளன. அவை பல்வேறு பிரிவுகளில் உயர் மட்ட கல்வியை வழங்குகின்றன.

  • அரசு பி.ஜி கல்லூரி, ஜலவர்
  • அரசு பெண்கள் கல்லூரி, ஜலவர்
  • அரசு சட்டக் கல்லூரி ஜலவர்
  • அரசு தோட்டக்கலை மற்றும் வனவியல் கல்லூரி, ஜலவர்
  • அரசு பொறியியல் கல்லூரி, ஜலவர்
  • பாலிடெக்னிக் கல்லூரி ஜலவர்
  • ஜலவர் மருத்துவக் கல்லூரி
  • அரசு பிர்லா கல்லூரி, பவானி மண்டி
  • அரசு கல்லூரி, சௌமஹ்லா

பார்க்க வேண்டிய இடங்கள்

  • கக்ரோன் கோட்டை [5]
  • சந்திரபாகா கோயில் [6]
  • கலிசிந்த் அணை
  • கக்ரோன் தர்கா [7]
  • கலிசிந்த் மின் மின் நிலையம்
  • கொல்வி குகைகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.