4வது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1605-1627) From Wikipedia, the free encyclopedia
நூருதீன் முகம்மது சலீம்[8] என்பவர் முகலாயப் பேரரசின் 4ஆவது பேரரசர் ஆவார். இவர் பொதுவாகத் தனது பட்டப்பெயரான ஜஹாங்கீர் என்ற பெயரால் அறியப்படுகிறார். இப்பாரசீகப் பெயரின் பொருள் உலகத் துரந்தரர் என்பதாகும்.[9] இவருக்கு இந்திய சூபித் துறவி சலீம் சிசுதியின் பெயர் வைக்கப்பட்டது.
முதலாம் ஜஹாங்கீர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாட்ஷா அல் சுல்தான் அல் ஆசம் | |||||||||||||||||
4வது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் உருவப்படம் | |||||||||||||||||
4வது முகலாயப் பேரரசர் | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | 3 நவம்பர் 1605 – 28 அக்டோபர் 1627 | ||||||||||||||||
முடிசூட்டுதல் | 24 நவம்பர் 1605 | ||||||||||||||||
முன்னையவர் | அக்பர் | ||||||||||||||||
பின்னையவர் | சகாரியார் மிர்சா (நடைமுறைப்படி) ஷாஜகான் | ||||||||||||||||
பிறப்பு | நூருதீன் முகம்மது சலீம் 30 ஆகத்து 1569 பத்தேப்பூர் சிக்ரி, முகலாயப் பேரரசு (இந்தியா) [1] | ||||||||||||||||
இறப்பு | 28 அக்டோபர் 1627 58) பிம்பெர், காஷ்மீர், முகலாயப் பேரரசு (தற்போதைய பாக்கித்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்) | (அகவை||||||||||||||||
புதைத்த இடம் | |||||||||||||||||
பட்டத்து இராணி | |||||||||||||||||
மனைவிகள் பலர்... |
| ||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||||||||||
| |||||||||||||||||
மரபு | தைமூர் குடும்பம் | ||||||||||||||||
அரசமரபு | முகலாய அரசமரபு | ||||||||||||||||
தந்தை | அக்பர் | ||||||||||||||||
தாய் | மரியம் உசு-சமானி | ||||||||||||||||
மதம் | சன்னி இசுலாம்[6][7] (அனாபி) | ||||||||||||||||
தேசிய முத்திரை |
இளவரசன் சலீம், அக்பருக்கும் அவரது பட்டத்து இராணியான[10] மரியம் உசு-சமானிக்கும் 3ஆவது மகனாக 30 ஆகத்து 1569ஆம் ஆண்டு பத்தேப்பூர் சிக்ரியில் பிறந்தார்.[11] இவருக்கு அசன் மிர்சா மற்றும் உசைன் மிர்சா என்று ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளான இரு அண்ணன்கள் இருந்தனர். 1564இல் மரியம் உசு-சமானிக்குப் பிறந்த இந்த இரண்டு அண்ணன்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.[12][13][14][15][16] இக்குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்ட காரணத்தால், தனது பேரரசுக்கு வாரிசு வேண்டும் என்பதற்காகத் துறவிகளின் ஆசியை அக்பர் வேண்டினார்.[17]
தனது முதன்மை இந்து மனைவி மீண்டும் ஒரு குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார் என்ற செய்தி அக்பருக்குத் தெரிவிக்கப்பட்ட போது, சேக் சலீம் சிசுதி தங்கியிருந்த இடத்திற்கு அருகில் சிக்ரியில் ஒரு அரண்மனையை நிறுவ ஆணை வழங்கப்பட்டது. அங்கே மதிப்புக்குரிய துறவியின் பார்வையில் அமைதியான சூழ்நிலையைப் பேரரசி அனுபவிக்குமாறு செய்யப்பட்டது. அங்கு நிறுவப்பட்ட அரண்மனைக்கு மரியம் இடமாற்றப்பட்டார். அவர் கர்ப்பமாயிருந்தபோது அக்பர் சிக்ரிக்கு பயணம் மேற்கொள்வார். தனது நேரத்தில் பாதியைச் சிக்ரியிலும், மற்றொரு பாதியை ஆக்ராவிலும் கழித்தார்.[18] மரியம் உசு சமானிக்குப் பிரசவ நாட்கள் நெருங்கியபோது, அவரை சேக் சலீமின் எளிமையான தங்குமிடத்திற்கு அக்பர் மாற்றினார். அங்கே அவர் இளவரசன் சலீமைப் பெற்றெடுத்தார். சேக் சலீமின் பெயர் இவருக்கு வைக்கப்பட்டது. துறவிகளின் வழிபாடுகளின் ஆற்றலில் அக்பருக்கு இருந்த நம்பிக்கையை இச்செயல் உணர்த்துகிறது.[11][19] தனக்கு வாரிசு வந்த செய்தியை அறிந்த அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சலீமின் பிறந்த நிகழ்வை ஒட்டி ஒரு பெரும் விருந்துக்கு ஆணையிட்டார். பெரும் குற்றமிழைத்த குற்றவாளிகளைக் கூட விடுவித்து ஆணையைப் பிறப்பித்தார். பேரரசு முழுவதும் பொதுமக்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. உடனே சிக்ரிக்குச் செல்ல அக்பர் தயாரானார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மகனின் பிறப்பிற்குப் பிறகு ஒரு தந்தை உடனே அவனைப் பார்க்கக்கூடாது என்று இந்துஸ்தானில் நிலவிய நம்பிக்கையின் பொருட்டு சிக்ரிக்குச் செல்லும் அவரின் பயணத்தைத் தள்ளி வைக்குமாறு அக்பரின் அவையோர்கள் அறிவுறுத்தினர். எனவே அக்பர் தனது பயணத்தைத் தள்ளி வைத்தார். இவர் பிறந்து 41 நாட்களுக்குப் பிறகு சிக்ரிக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனைக் கண்டார்.
ஜஹாங்கீரின் வளர்ப்புத்தாய் இந்திய சூபித் துறவி சலீம் சிசுதியின் மகள் ஆவார். இவரின் வளர்ப்புச் சகோதரர் சிசுதியின் பேரனான குதுபுதீன் கோகா (உண்மையில் சேக் குபு) ஆவார்.[20][21]
சலீம் தனது 5ஆம் வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார். இந்த நிகழ்வின்போது தனது மகன் கல்வி கற்பதைத் தொடங்கி வைக்க விழா எடுப்பதற்காக ஒரு பெரிய விருந்தைப் பேரரசர் அக்பர் அளித்தார். இவரது முதல் ஆசிரியர் குத்புதீன். சில காலத்திற்குப் பிறகு இவருக்குப் பல ஆசிரியர்கள் இராணுவ உத்திகள் பற்றிப் பாடம் எடுத்தனர். இவரது தாய்மாமனான பகவந்த் தாசு போர் உத்திகள் பற்றிய பாடத்தை அளித்த ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சலீம் பாரசீக மொழியையும், நவீனகாலத்திற்கு முந்தைய இந்தியையும் சரளமாகப் பேசி வளர்ந்தார். முகலாயர்களின் பண்டைய மொழியான துருக்கிய மொழியைப் பற்றிய மதிக்கத்தக்க அறிவையும் இவர் கொண்டிருந்தார்.[22]
இவர் 3 நவம்பர் 1605 வியாழக் கிழமைக்கு அன்று இவரது தந்தையின் இறப்பிற்கு எட்டு நாட்களுக்கு பிறகு அரியணை ஏறினார். சலீம் அரியணைக்கு நூருதீன் முகம்மது ஜஹாங்கீர் பாட்ஷா காஷி என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். இவ்வாறாக தனது 36ஆம் வயதில் தன்னுடைய 22 ஆண்டு கால ஆட்சியை தொடங்கினார். சீக்கிரமே இவர் தன்னுடைய சொந்த மகன் இளவரசர் குஸ்ராவு மிர்சாவுடனேயே சண்டையிட வேண்டியிருந்தது. அக்பரின் உயிலை அடிப்படையாகக் கொண்டு அக்பரின் அடுத்த வாரிசாக அரியணைக்கு குஸ்ராவு மிர்சா உரிமை கோரினார். பர்கா மற்றும் புகாரி சையிதுகளின் உதவியுடன் 1606ஆம் ஆண்டு குஸ்ராவு மிர்சா தோற்கடிக்கப்பட்டார். ஆக்ரா கோட்டையில் ஒடுக்கி வைக்கப்பட்டார்.[23] தன்னுடைய விருப்பத்திற்குரிய மகனாக ஜஹாங்கீர் தன்னுடைய மூன்றாவது மகன் இளவரசர் குர்ரமை (பட்டப்பெயர் ஷாஜகான்) கருதினார். தண்டனையாக குஸ்ராவு மிர்சா தன்னுடைய தம்பி குர்ரமிடம் ஒப்படைக்கப்பட்டார். பகுதியளவு கண்பார்வையற்றவர் ஆக்கப்பட்டார். பிற்காலத்தில் நூர் சகான் என்று அறியப்பட்ட மெகருன்னிசாவுடனான தனது திருமண வாழ்வு காலத்திலிருந்து, ஜஹாங்கீர் தன்னுடைய அரசாங்கத்தின் கடிவாளத்தை அவரது கைகளில் கொடுத்துவிட்டார். நூர் சகானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை உயர் பதவிகளுக்கு நியமித்தார். நூர் சகானுக்கு முழுவதுமான பேச்சு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜஹாங்கீர் அவரை கண்டிக்கவில்லை. மாறாக சிறு விஷயங்களில் கூட ஜஹாங்கீரிடம் நூர் சகான் சண்டையிட்டார். அரசை கட்டுப்படுத்துவதில் அதற்கு முன்னர் கண்டிராத சுதந்திரத்தை நூர் சகான் கொண்டிருந்தார். நூர் சகானின் சுதந்திர செயல்பாடுகள் ஜஹாங்கீரின் அரசவையினர் மற்றும் அயல் நாட்டவர் ஆகியோர் மத்தியில் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தியது.[24] அக்டோபர் 1616இல் அகமது நகர், பிஜாப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய அரசுகளின் ஒன்றிணைந்த படைகளுக்கு எதிராக சண்டையிட ஜஹாங்கீர் இளவரசர் குர்ரமை அனுப்பினார்.[25] எனினும், நூர் சகான் தனது முதல் கணவருடன் தான் பெற்றெடுத்த மகளான லத்லி பேகத்தை ஜஹாங்கீரின் இளைய மகன் சகாரியர் மிர்சாவுக்கு பெப்ரவரி 1621இல் திருமணம் செய்து வைத்தது, தன்னுடைய சிற்றன்னை தன்னைத் தாண்டி சகாரியரை ஜஹாங்கீரின் வாரிசாக நியமிக்க முயற்சிப்பதாக குர்ரம் சந்தேகிப்பதற்கு வழி வகுத்தது. தக்காணத்தின் கரடு முரடான நிலப்பரப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 1622ஆம் ஆண்டு ஜஹாங்கீருக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைக் குர்ரம் தொடங்கினார். ஜஹாங்கீரின் அரசவையில் ஒரு அரசியல் பிரச்சினையை இது விரைவுபடுத்தியது. குர்ரம் அரியணைக்கு தன்னுடைய சொந்த பாதையை மென்மையாக்கும் பொருட்டு கண்பார்வையற்ற தனது அண்ணன் குஸ்ராவு மிர்சாவை கொலை செய்தார்.[26]
இதே நேரத்தில், 1622ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் சபாவிய ஆட்சியாளரான ஷா அப்பாஸ் காந்தாரத்தைத் தாக்கினார். முகலாயப் பேரரசின் எல்லையில் ஒரு வணிக மையமாகவும், முகலாய அரசமரபைத் தோற்றுவித்த பாபர் புதைக்கப்பட்ட இடமாகவும் இருந்ததால் சபாவியர்களை முறியடித்து வெளியேற்ற சகாரியாரை ஜஹாங்கீர் அனுப்பினார். சகாரியரின் அனுபவமின்மை மற்றும் கடுமையான ஆப்கானிய குளிர்காலம் ஆகியவற்றின் காரணமாக காந்தாரமானது சபாவியர்களிடம் வீழ்ந்தது. மார்ச் 1623இல் தன் மிகுந்த விசுவாசத்துக்குரிய தளபதிகளில் ஒருவரான மகாபத் கானை தக்காணத்தில் குர்ரமின் கிளர்ச்சியை ஒடுக்குமாறு ஜஹாங்கீர் ஆணையிட்டார். குர்ரமுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான வெற்றிகளை மகாபத் கான் பெற்றதற்குப் பிறகு உள்நாட்டு போரானது இறுதியாக அக்டோபர் 1625இல் முடிவுக்கு வந்தது.[25][9]
ஜஹாங்கீர் தன்னுடைய "நீதி சங்கிலிக்கு" பெயர் பெற்றிருந்தார். சம கால ஓவியங்களில் தங்க மணிகளையுடைய ஒரு தங்கச் சங்கிலியாக இது காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய நினைவுக் குறிப்பான துசுக்-இ-ஜஹாங்கீரியில் ஒடுக்கப்பட்ட குடி மக்கள் எந்த ஒரு நிலையிலும் நீதி மறுக்கப்பட்டிருந்தால் பேரரசரிடம் முறையிடுவதற்காக இந்த சங்கிலியை உருவாக்க தான் ஆணையிட்டதாக ஜஹாங்கீர் எழுதியுள்ளார். முகலாய அரசவைக்கு பிரித்தானிய தூதுவராக வந்த தாமசு ரே "தரிசனத்தின்" போது தீர்ப்புகளானவை அவர்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் பேரரசரின் கவனத்தை பெறுவதற்காக நீதி சங்கிலியை மனு அளிப்பவர்கள் பயன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்து சமய-அரசியல் பழக்க வழக்கங்களின் படி தங்களது குடி மக்களுக்கு முன்னாள் தோன்றி மக்களை சந்திப்பதிலிருந்து முகலாயப் பேரரசர்கள் இந்த "தரிசன" பழக்க வழக்கத்தைப் பின்பற்றியிருந்தனர். இது மனு நீதிச் சோழனின் நீதி வழங்கும் முறையை ஓரளவு ஒத்துள்ளது.[27]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.