இந்திய வரலாற்றாளர், ஆய்வாளர் மற்றும் திராவிடவியலாள From Wikipedia, the free encyclopedia
சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார் (ஏப்ரல் 15, 1871 – 26 நவம்பர் 1946) ஒரு இந்திய வரலாற்றாளர், ஆய்வாளர் மற்றும் திராவிடவியலாளர். இவரது வரலாற்று ஆராய்ச்சி முறை இந்திய தேசஞ்சார்ந்ததாக அமைந்திருந்தது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக பணியாற்றியவர் (1914 - 1929). பதின்மூன்று நூல்களும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தென்னிந்திய வரலாற்றை எழுதி உலகறியச் செய்தவர்.
எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் | |
---|---|
பிறப்பு | சாக்கோட்டை கிருஷ்ணசுவாமி ஐயங்கார் 15 ஏப்ரல் 1871 சாக்கோட்டை, சென்னை மாகாணம் |
இறப்பு | 26 நவம்பர் 1946 75) சென்னை, இந்தியா | (அகவை
பணி | வரலாற்றாளர், கல்வியாளர், பேராசிரியர், நூலாசிரியர் |
கிருஷ்ணசாமி அய்யங்கார் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள சாக்கோட்டைக் கிராமத்தில் பிறந்தார்.[1] இவரது 11 வது வயதில் இவருடைய தந்தை காலமானார்.[2] தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்தில் முடித்துவிட்டு பெங்களூரில் தம் தமையனார் உதவியுடன் கல்வி பயின்றார். இவர் விரும்பி படித்தவை இயற்பியலும் கணிதமும். பள்ளியில் ஆசிரியர் பணியைச் செய்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை (1897) மற்றும் கணிதத்தில் முதுகலைப் (1899) பட்டம் பெற்றார்.[3][4] அடிக்கடி மாறுதல் ஆனபடியால் கணிதம் பயில்வதைத் தொடராமல் வரலாற்றுப் பாடத்தில் தம் ஆர்வத்தைச் செலுத்தினார்.
தென்னிந்திய கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பற்றி ராபர்ட் செவல் எழுதிய புத்தகங்கள் கிருஷ்ணசாமி அய்யங்காரை விஜயநகர வரலாற்று ஆராய்ச்சியில ஈடுபாடு கொள்ளத் தூண்டியது.[3] 1920ல் விஜயநகர வரலாறு பற்றிய தலைசிறந்த படைப்புகளை இவர் வெளியிட்டார்.[3] இவரது ஆய்வுமுறை, செவல் மற்றும் இவருக்கு முந்தைய வரலாற்றாளர்களிலிருந்து வேறுபட்டிருந்தது. விஜயநகரப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்த இந்து-முஸ்லீம் மோதல்களையும் சண்டைகளையுமே இவரது ஆராய்ச்சி சார்ந்துள்ளது.[3] 1921ல் வெளிவந்த இவரது ஏன்ஷியன்ட் இந்தியா என்ற புத்தகத்தில் போசள அரசன் மூன்றாம் வீர வல்லாளன் தெற்கிலிருந்து முகமதியர்களைத் துரத்தியடிக்க மேற்கொண்ட முயற்சிகளாலும், இந்துக்களுக்காக நடத்திய சண்டைகளினால் (மதுரை சுல்தானகத்துடன்) அவரது வம்சமே முடிவுக்கு வந்தது என்றும் கூறியுள்ளார்.[7] இவரது கூற்றுக்களைக் கன்னட வரலாற்றாளர் பி. ஏ. சாலடூர், தெலுங்கு வரலாற்றாளர் என். வெங்கடரமணய்யாவும் ஆமோதிக்கின்றனர்.[8] கிருஷ்ணசாமி அய்யங்காரின் ஆய்வுமுறை தேசியவாதம் சார்ந்து அமைந்திருப்பதாக ஆ. இரா. வேங்கடாசலபதி கூறுகிறார். அவரது தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகங்களில், தென்னிந்தியா இந்திய நாட்டின் பிறபகுதிகளுடன் நெருங்கிய தொடர்புடையாதாகவே காட்டப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் வரலாறும் நாகரீகமும் பரந்த இந்தியப் பாரம்பரியத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
களப்பிரர்கள் ஆட்சிக் காலம், சோழர் ஆட்சி முறை, பல்லவர் வரலாறு, விசய நகர வரலாறு ஆகியன இவருடைய ஆய்வுகளால் வெளிவந்தன. தென்னிந்தியப் பண்பாடு பற்றியும் எழுதினார். சங்க இலக்கியங்களைச் சான்றாகக் கொண்டு வரலாறு எழுதலாம் என்னும் முறையைக் கையாண்டார்.
{{cite book}}
: |first=
missing |last=
(help); Unknown parameter |coauthors=
ignored (help){{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help){{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help){{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help){{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help){{cite book}}
: Cite has empty unknown parameter: |1=
(help)Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.