இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
கு. சண்முகசுந்தரம் (K. Shanmugasundaram) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார்.
கு. சண்முகசுந்தரம் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சி. மகேந்திரன் |
தொகுதி | பொள்ளாச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1970[1] திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | வனிதா |
பிள்ளைகள் | நிஹாரிகா |
கல்வி | இயந்திரப் பொறியியல் |
இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள பெருமாள் புதூர் ஆகும். இவர் 1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இயந்திரப் பொறியியல் பட்டதாரி ஆவார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.
இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
இவர் தற்போது திமுகவின் பொறியாளர் அணி மாநில துணைத் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் 46,025 வாக்குகள் வேறுபாட்டில் தோல்வியடைந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.