From Wikipedia, the free encyclopedia
கர்நாடக மாநில நாள் (Karnataka Formation Day) அல்லது (கர்நாடக/கன்னட மாநிலம் உருவான நாள் என்று பொருள்படும்) கர்நாடக / கன்னட ராஜ்யோத்சவா (கன்னடம்: ಕನ್ನಡ ರಾಜ್ಯೋತ್ಸವ) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. கன்னட மொழி பேசும் தென்னிந்தியாவின் பகுதிகளை ஒருங்கிணைத்து இதே நாளில் 1956ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானதை இந்நாள் கொண்டாடுகிறது.[3]
கர்நாடக ராஜ்யோத்சவா ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯೋತ್ಸವ | |
---|---|
![]() மாநில நாளன்று டொல்லு குனிதா என்ற பாரம்பர்ய நடனமாடும் பெண்கள் | |
பிற பெயர்(கள்) | கன்னட ராஜ்யோத்சவா, கர்நாடகம் உருவான நாள் |
கடைப்பிடிப்போர் | இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கன்னடியர்கள் [1] |
வகை | மாநிலம் |
முக்கியத்துவம் | தென்னிந்தியாவில் கன்னடம் பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கர்நாடக மாநிலம் உருவாதல் |
கொண்டாட்டங்கள் | கன்னடக் கொடியை ஏற்றுதல், ஊர்வலங்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், ராஜ்யோத்சவா விருதுகள்[2] |
நாள் | நவம்பர் 1 |
கர்நாடக மாநிலத்தில் இந்த நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4] மேலும் உலகெங்கும் உள்ள கன்னடியர்களும் இந்த நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொண்டாடுகிறார்கள்.[1] மாநில முதல்வரும் ஆளுனரும் கன்னடக் கொடியை ஏற்றி உரையாற்ற கர்நாடக மாநில அரசு ராஜ்யோத்சவா விருதுகளை வழங்குவதுடன் [5] சமூக விழாக்கள், இசைக்குழுக்கள், கன்னட நூல்கள் வெளியீடு, பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்கிறது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.