எல். ஆர். ஈசுவரி (பிறப்பு:7 திசம்பர் 1939) என்பவர் தமிழ்நாட்டின் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.[1]

விரைவான உண்மைகள் எல். ஆர். ஈசுவரி, பின்னணித் தகவல்கள் ...
எல். ஆர். ஈசுவரி
Thumb
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்இலூர்துமேரி இராஜேஸ்வரி
பிறப்பு7 திசம்பர் 1939 (1939-12-07) (அகவை 85)
சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1954-தற்போது வரை
மூடு

வாழ்க்கைச் சுருக்கம்

இலூர்து மேரி ஈசுவரி பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்குச் சென்னையில் பிறந்தார். இவரது தாயார் எம். ஆர். நிர்மலா, ஜெமினி சுடூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "இலூர்துமேரி இராஜேஸ்வரி". எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உள்ளனர்.

திரையுலகில்

மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினருடன் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் சேர்ந்து பாடினார்.[2] அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் வாய்ப்பு நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதற் பாடலாகும்.

1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயோ தோழி வாராயோ என்ற பாடல் இவருக்கு பரவலான புகழைத் தேடித் தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", முத்துக்குளிக்க வாரியளா, தட்டட்டும் கை தழுவட்டும், நதியே மதுவானால், பத்து பதினாறு முத்தம் முத்தம், பட்டத்து இராணி பார்க்கும் பார்வை, குடிமகனே பெரும் குடிமகனே, அதிசய உலகம் ரகசிய இதயம் போன்ற பாடல்கள் இவருக்குப் பரவலான புகழைத் தேடித்தந்தன.

மறு நுழைவு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த ஒஸ்தே திரைப்படத்தில் "கலாசலா கலாசலா" என்ற பாடலைப் பாடியதில் மீண்டும் பிரபலமானார். இப்பாடல் வெளியான சில நாட்களிலேயே அதிகமானோரைச் சென்றடைந்தது. அடுத்த ஆண்டு தடையறத் தாக்க படத்தில் "நா பூந்தமல்லிடா" என்ற பாடலைப் பாடினார். இவர் சமீபத்தில் விக்டரி படத்திற்காக கைலாஷ் கெருடன் "யக்கா நின் மகளு நானகே" என்ற கன்னடப் பாடலைப் பாடியுள்ளார், இதுவும் சிறந்த பாடலானது. 2013-இல், ஆர்யா சூர்யா படத்தில் டி. ராஜேந்தருடன் இணைந்து "தகடு தகடு" என்ற இணைப் பாடலைப் பாடினார். 2014-இல் பரத்வாஜ் இசையமைத்த அதிதி திரைப்படத்தில் "ஜெய்பூரில் ஜெய்பூரில்" பாடலைப் பாடினார். 2020ஆம் ஆண்டில், நயன்தாரா நடித்த திரைப்படமான "மூக்குத்தி அம்மன்" படத்திற்காக ஆதி குத்து என்ற பாடலைப் பாடியுள்ளார்.

ஈஸ்வரி பாடிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் பாடல், படம் ...
பாடல்படம்
"முத்துக்குளிக்கா வாரீகளா" அனுபவி ராஜா அனுபவி
"தகடு தகடு" ஆர்யா சூர்யா
"காவேரி தண்ணியில் குளிச்சாவடி" ஆயிரம் பொய்
"சாய வீதி" பாவ மன்னிப்பு
"மாப்பிள்ளை ராகசியம்" அரங்கேற்றம்
"அடி என்னடி உலகம்" அவள் ஒரு தொடர் கதை
"என்ன சொல்ல என்ன சொல்ல" பாபு
"கண்களும் காவடி" எங்க விட்டுப் பிள்ளை
"புத்தி சிகாமணி" இருவர் உள்ளம்
"சித்திரை பூவிழி" இதயத்தில் நீ
"யென்ன பொருதமாடி" கனவன்
"ஆடவரலாம் ஆடவரலாம்[3]" கருப்பு பணம்
"மலர்ந்திர முகம் இந்து" காதலிக்க நேரமில்லை
"எந்தன் நெஞ்சம் யாரை" காதலித்தால் போதுமா
"காதல் பெண்ணே" காதலித்தால் போதுமா
"மாப்பிள்ளை வந்தான்" காவேரியின் கணவன்
"பூத்தாலே உன்னையும்" லட்சுமி கல்யாணம்
"அவளா இவள்" மன்னாதி மன்னன்
"அவள் ஒரு கதாநாயகி" மூன்று முடிச்சு
"சிங்கப்பூர் மச்சான்" நாம் மூவர்
"பிறந்த இடம் தேடி" நான் ஆணையிட்டாள்
"தூக்கத்திலும்" நல்ல இடத்து சம்மந்தம்
"ஓ லட்சுமி" நீல வனம்
"நீ நினைதல்" நிலவே நீ சாட்சி
"இனிமை நிறைந்த உலகம்" நினைத்தாலே இனிக்கும்
"நாம் ஒருவரை ஒருவர்" ஒருவர்
"என் வாலிபம் என்னும் மகிழையில்" பால்குடம்
"வாராயோ தோழி" பாச மலர்
"சொன்னதெல்லாம் நடந்திடுமா" பாத காணிக்கை
"இதழை விரித்தது ரோஜா" பட்டணத்தில் பூதம்
"கால்கள் நின்றது" பூஜைக்கு வந்த மலர்
"இது மார்கழி மதாம்" பிராப்தம்
"சாலா சலா கத்தோட்டம்" பிராப்தம்
"ராஜா வீட்டு பெண்ணானாலும்" ராஜா வீட்டு பிள்ளை
"மணமகளே மருமகளே" சாரதா
"லில்லி லாலி ஜிம்மி" செல்வம்
"வெண்ணிலா முகம்" செல்வமகள்
"நானொரு காதல்" தவப்புதல்வன்
"பெண்ணை பார்த்தும்" சாந்தி நிலையம்
"புஷ்ப ராகம்" தனிக் குடிதானம்
குலுங்க குலுங்க காய் கொடுத்த தெய்வம்
நினைத்தேன் உன்னை தங்கை
நூறாண்டு காலம் வாழ்க பேசும் தெய்வம்
ராஜ ராஜஸ்ரீ ராணி ஊட்டி வரை உறவு
கடவுள் தந்த இரு மலர்கள்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
உரவினியேல் பிப்டி பிப்டி கலாட்டா கல்யாணம்
முந்தி முந்தி விநாயகனேயா என் தம்பி
தட்டட்டும் கை தழுவட்டும் என் தம்பி
சக்தி தன்னாடு தங்க சுரங்கம்
நதிேயா மதுவானாள் தங்க சுரங்கம்
முத்தமிடும் நேரம் சிவந்தமண்
பட்டத்து ராணி சிவந்தமண்
பத்து பத்தினாரு அஞ்சலி பெட்டி 520
ஆதி மனிதன் அஞ்சலி பெட்டி 520
ஏய் அன்பளிப்பு
"கோட்டை மதிர் மேல" திருடன்
நினைத படி திருடன்
சொர்ரகம் பக்கத்தில் எங்க மாமா
இதுதான் என்னது விளையாட்டுப் பிள்ளை
மை லேடி காட் பாடி வியட்நாம் வீடு
உங்க நல்ல மனசுக்கு எதிரொளி
கல்யாணமா கல்யாணம் எதிரொளி
ஹலோ மிஸ் எங்கிருந்தோ வந்தாள்
நாலு காலு சார் சொர்கம்
"இவ்வளவுதன் உலகம்" உலகம் இவளவுதான்
"அட சரிதான் போடி" உயிர மானமா
"சவலே சமாளி" உயிர மானமா
"எங்கே எங்கே என் மனது" வாலிப விருந்து
"அம்மம்மா கண்ணத்தில் கண்ணம்" வல்லவன் ஒருவன்
"பளிங்கினால் ஒரு மாளிகை" வல்லவன் ஒருவன்
"காததோடுதான் நான்" வெள்ளி விழா
"அள்ளிப்பந்தல் கால்கள்" வெண்ணிற ஆடை
"நீ எம்ப்பதென்ன" வெண்ணிற ஆடை
"பொண்டமல்லி" தடையரா தாக்க
"கலாசலா கலாசாலா" ஒஸ்தே
"ராணிப்பேட்டை ராணி" தமிழ்செல்வனும் கலைசெல்வியும்
"எலந்த பழம்" பணமா பசமா
"ஆடி குத்து" மூக்குத்தி அம்மன்
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.