From Wikipedia, the free encyclopedia
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் (Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka) என்பது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டமூலம் ஆகும்.[1] இத்திருத்தச் சட்டமூலத்தின் படி, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஆகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஆக்கப்பட்டது.[2]
1987 சூலை 29 இல், அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முகமாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜெயவர்தனாவிற்கும் இடையில் கொழும்பு நகரில் கையெழுத்திடப்பட்டது.[3] இதனை அமுல் படுத்தும் வகையில் 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் 1978 அரசமைப்புச் சட்டத்திற்கு 13வது திருத்தத்தை அறிவித்து, இல. 42 மாகாண சபை சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.