இர. ந. வீரப்பன்
From Wikipedia, the free encyclopedia
இர. ந. வீரப்பன் (சூன் 8, 1930 - செப்டம்பர் 3, 1999) மலேசியத் தமிழறிஞரும், தமிழாசிரியரும் ஆவார். ஏறக்குறைய 43 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களிடம் உறவு பாராட்டி கள ஆய்வுப்பணி செய்து 43 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் ஈடுபட்டவர்.[1] மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்,[2] தமிழ் இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளைத் தோற்றுவித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இர. ந. வீரப்பன் இலங்கையின் மலையகத்தில் நடேசன், இரத்தினம் ஆகியோருக்குப் பிறந்தவர். தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறினார். 1953 இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி எனப் பல பள்ளிகளில் பணியாற்றி 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 1990 ஆம் ஆண்டு வரையில் கிள்ளான் அப்துல் சமது இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி கற்பித்தார்.[1]
1990களில் இவர் உலகத் தமிழர் குரல் என்ற மாதாந்த சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார்.
தமிழகக் கவிஞர் கதிர் முத்தையனார், இலண்டனைச் சேர்ந்த சுரதா முருகையன் ஆகியோர் இர.ந.வீரப்பனைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளனர். இவரது மகள் வீ. முல்லை நாகராசு ‘இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.[1]
எழுதிய சில நூல்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.