From Wikipedia, the free encyclopedia
அனுர பிரியதர்சன யாப்பா (Anura Priyadharshana Yapa, (பிறப்பு: சனவரி 18, 1959) இலங்கை அரசியல்வாதி). இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருனாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் சுற்றாடல்துறை அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று முதலீட்டு மேலாண்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
அனுர பிரியதர்சன யாப்பா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் குருனாகலை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 18, 1959 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
சமயம் | பௌத்தம் |
யக்வெலவில் வசிக்கும் இவர் ஒரு சட்டத்தரணி ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
Seamless Wikipedia browsing. On steroids.