அத்திரி ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.

விரைவான உண்மைகள் பிரம்மரிஷி அத்திரி, தகவல் ...
பிரம்மரிஷி அத்திரி
Thumb
அத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் உரையாடுதல் , சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல்
தகவல்
துணைவர்(கள்)அனுசுயா
பிள்ளைகள்துர்வாசர், தத்தாத்ரேயர், சந்திரன்
மூடு

இராமாயணத்தில்

14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி - அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.[2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]

தமிழில் பழமொழி

" " " அத்திரி பாச்சா வித்தைகள் எல்லாம் இங்கு பலிக்காது " " "

என்ற பழமொழி தமிழகத்தில் இம்முனிவர் பெயரால் கேலியாக பேசபடுவது உண்டு.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.