From Wikipedia, the free encyclopedia
அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.[1]
தேவாரம் பாடல் பெற்ற அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அகத்தியான் பள்ளி |
பெயர்: | அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அகத்தீசுவரர் |
தாயார்: | மங்கை நாயகி |
தல விருட்சம்: | வன்னி, அகத்தி |
தீர்த்தம்: | அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம்(கடல் அருகிலுள்ளது) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
"வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!"
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.