2 பேதுரு (நூல்)
திருவிவிலிய நூல் / From Wikipedia, the free encyclopedia
2 பேதுரு அல்லது பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் (Second Letter [Epistle] of Peter) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்திரண்டாவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Petrou B (Επιστολή Πέτρου βʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II Petri எனவும் உள்ளது.
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் இராயப்பர் எழுதிய இரண்டாம் நிருபம் என்றிருந்தது.
பேதுருவின் முதல் திருமுகம் போலவே இதுவும் திருமுகப் பாணியில் அமைந்த மறையுரையே. யூதா திருமுகத்தோடு இது நெருங்கிய தொடர்புடையது. அதனை அடிப்படையாகக் கொண்டு இத்திருமுகம் வரையப்பட்டிருக்கலாம்.பிற்கால மடலாக இருப்பதால் இது கிறிஸ்துவைப் பற்றிய வளர்ச்சியடைந்த கிறிஸ்தியல் கருத்துகளைக் குறிப்பிடுகிறது[2].