2023 சுந்தனுக்கூர் எரிமலை வெடிப்பு
From Wikipedia, the free encyclopedia
2023 சுந்தனுக்கூர் எரிமலை வெடிப்பு (2023 Sundhnúkur eruption) என்பது 18 திசம்பர் 2023 அன்று மாலை, ஐசுலாந்தின் கிரின்டாவிக் நகருக்கு வடக்கே சுந்த்னுக்கூர் பள்ளச் சங்கிலியில் எரிமலை வெடிப்பினைக் குறிக்கிறது. தரையில் உள்ள பிளவுகளில் இருந்து எரிமலைக்குழம்பு கசிந்தது.[1] 19 திசம்பர் தொடக்கத்தில் வெடிப்பு மற்றும் அதனுடன் இணைந்த நில அதிர்வு நடவடிக்கைகளின் தீவிரம் குறைந்தது, புதிதாக திறக்கப்பட்ட பிளவுகளின் இருபுறமும் எரிமலைக்குழம்பு பக்கவாட்டில் பரவியது. 2021- ஆம் ஆண்டில் வெடிப்பு நிகழ்வு தொடங்கியதிலிருந்து ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு என்று விவரிக்கப்படுகிறது. மேலும் 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ரெய்க்ஜாவிக் வரை இந்த எரிமலை வெடிப்பு தெரியும். சுந்த்னுக்கூர் எரிமலைப் பள்ளத் தொடர் மற்றும் ஐஸ்லாந்தில் தற்போது செயலில் உள்ள எரிமலைப் பிளவு, ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பிளவு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். [2]
2023 சுந்தனுக்கூர் எரிமலை வெடிப்பு | |
---|---|
ஐசுலாந்து காலநிலையியல் அலுவலகத்தால் 18 திசம்பர் 2023 அன்று எடுக்கப்பட்ட எரிமலை வெடிப்பின் ஒளிப்படம் | |
எரிமலை | எல்ட்வோர்ப்-ஸ்வார்ட்செங்கி |
வகை | விரிசல்வழிப் பீறிடல் |
அமைவிடம் | ரெய்க்யவிக் தீபகற்பம், ஐசுலாந்து 63°52′45″N 22°23′14″W |
தாக்கம் | நில நடுக்கங்கள், நிலப்படிவுகள், எரிமலைக்குழம்பு வெளியேற்றம், எரி கற்குழம்பு; கிரிந்தாவிக்கு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர் |
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி எல்ட்வோர்ப்-ஸ்வார்ட்செங்கி எரிமலை அமைப்பில் கடுமையான நிலநடுக்கம் காரணமாக திரளாக வெடிப்பு ஏற்பட்டது, இது அப்பகுதிக்கு அடியில் ஒரு மாக்மாக் குழம்பு ஊடுருவலால் ஏற்பட்டது. [3] நிலநடுக்கங்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தன்மை நவம்பர் 10 அன்று வியத்தகு முறையில் அதிகரித்தது. அந்த நேரத்தில் 20,000 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் மிகப்பெரியது 5.3 எண்ணளவைத் தாண்டியது. கிரிண்டாவக்கில் மக்கள் வெளியேற்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரிய அளவிலான உமிழ்தல் படிவு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. [3]