2018 கேரள வெள்ளம்
2018-ஆம் ஆண்டு இந்திய மாநிலமான கேரளாவில் நிகழ்ந்த ஒரு வெள்ளப்பெருக்கு / From Wikipedia, the free encyclopedia
2018 ஆகஸ்டில் பருவமழைக் காலத்தில் பெய்த அசாதாரணமான மழை காரணமாக கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் கேரளாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இதுவாகும்.[2] இதில் 373 பேர் இறந்தனர். 314,391[3] பேர் இடம்பெயர்ந்தனர்.[4][5]
விரைவான உண்மைகள் நாள், அமைவிடம் ...
நாள் | ஆகத்து 2018 (2018-08) – () |
---|---|
அமைவிடம் | கேரளா, இந்தியா |
காரணம் | குறைந்த அழுத்தம் அதிக மழை நிலச்சரிவு |
இறப்புகள் | 373 |
சொத்து சேதம் | 15,000 கோடி[1] |
இணையதளம் | கேரளா மீட்பு |
மூடு
மாநிலத்தின் 42 அணைகளில் 35 அணைகள் வரலாற்றில் முதன்முறையாக திறக்கப்பட்டன. செறுதொனி அணையின் ஐந்து வாயில்களும் 26 வருட இடைவெளிக்குப் பிறகு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.[6] அதிக மழை காரணமாக மலைசார்ந்த மாவட்டமான வயநாடு தனிமைப்படுத்தப்பட்டது.[7]