ஹேகியா சோபியா
From Wikipedia, the free encyclopedia
ஹேகியா சோபியா (/ˈhɑː.ɪə soʊˈfi.ə/; கிரேக்க மொழி: Ἁγία Σοφία, "புனித ஞானம்"; இலத்தீன்: Sancta Sophia / Sancta Sapientia; துருக்கியம்: Ayasofya) துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய மரபுவழிக் கிறித்தவப் பிரிவினரின் பெருங்கோவிலாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஓட்டோமான் பேரரசு நிகழ்த்திய படையெடுப்பைத் தொடர்ந்து காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சியுற்றபோது, இப்பெருங்கோவிலை ஓட்டோமான்கள் கைப்பற்றினர். இதன் விளைவாகக் கிறித்தவம் நலிவடையத் தொடங்கியது.
ஹேகியா சோபியாவின் ஒரு தோற்றம் | |
ஆள்கூறுகள் | 41.008548°N 28.979938°E / 41.008548; 28.979938 |
---|---|
இடம் | காண்ஸ்டாண்டிநோபுள் (இன்றைய இசுதான்புல், துருக்கி) |
வடிவமைப்பாளர் | இசிடோர் மைலீட்டசு (Isidore of Miletus) திரால்லசு நகர அந்தேமியசு |
வகை | கீழை மரபுவழிப் பெருங்கோவில்: கி.பி. 537–1204 உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் (1204–1261) |
கட்டுமானப் பொருள் | செதுக்குக் கல், செங்கல் |
நீளம் | 82 m (269 அடி) |
அகலம் | 73 m (240 அடி) |
உயரம் | 55 m (180 அடி) |
துவங்கிய நாள் | 532 |
முடிவுற்ற நாள் | 537; 1487 ஆண்டுகளுக்கு முன்னர் (537) |