ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்
பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஆன்மீக சமூகம் (ஆசிரமம்) / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் (Sri Aurobindo Ashram) என்பது புதுச்சேரியிலுள்ள ஆன்மீக மையமாகும். 1910 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து விலகிய பின்னர், பாண்டிச்சேரியில் குடியேறிய அவரும், அவரைச் சார்ந்த குழுவாலும் இந்த ஆசிரமம் உருவாக்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டு நவம்பர் 24, அன்று, ஸ்ரீ அரவிந்தர் ஒரு பெரிய ஆன்மீக உணர்தலுக்குப் பின்னர், ஆன்மீக வேலைகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் அவர் தனது ஆன்மீக ஒத்துழைப்பாளரான "அன்னை"க்கு ஆசிரம நிர்வாகத்திற்கான முழுப்பொறுப்புகளையும் வழங்கினார். அவர் முன்பு மிரா அல்ஃபாஸா என அழைக்கப்பட்டார். ஆகையால் இந்த நாள் பொதுவாக ஆசிரமத்தை நிறுவும் தினமாக அறியப்படுகிறது. இருப்பினும், ஸ்ரீ அரவிந்தோ எழுதியது போலவே, "தன்னை மையமாக வைத்து வளரும் ஒரு நிலையமாகும்" .[1]
விரைவான உண்மைகள் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், துவங்கியது ...
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் | |
---|---|
துவங்கியது | 24 நவம்பர் 1926 (97 ஆண்டுகள் முன்னர்) (1926-11-24) |
வகை | ஆன்மீக சமுதாயம் |
Legal status | இலாப நோக்கமற்ற நிறுவனம் |
Purpose/focus | தியானம், ஆன்மீகம் |
தலைமையகம் | பாண்டிச்சேரி, இந்தியா |
ஆள்கூறுகள் | 11.55°N 79.47°E / 11.55; 79.47 |
Main organ | ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அறக்கட்டளை |
வலைத்தளம் | sriaurobindoashram.org |
மூடு