வோன்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
வோன்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல் (WannaCry ransomware attack) என்பது ஓர் இணையத் தாக்குதல் ஆகும். வோன்னாகிரை (அல்லது WannaCrypt,[3] WanaCrypt0r 2.0,[4][5][6]) இந்த பணயத் தீநிரல் கணினிப்புழுவின் இலக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கணினிகள் ஆகும். இதன் தாக்குதல் மே 12 2017, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, இதுவரை 150 நாடுகளில் 230,000 மேற்பட்ட கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது, இதன் பாதிப்பிலிருந்து விடுபட 28மொழிகளில் இந்த மென்பொருள் நுண்நாணயமான பிட்காயினில் கட்டணம் செலுத்த அறிவுறுத்துகிறது.[7] முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த தாக்குதல் உள்ளது என யுரோபோல் விவரித்துள்ளது.[8]
நாள் | 12 May 2017– தற்போது |
---|---|
அமைவிடம் | உலகளவில் |
பிற பெயர்கள் | WannaCrypt, WanaCrypt0r. WCRY |
வகை | இணையத் தாக்குதல் |
கருப்பொருள் | மறையாக்கப்பட்ட பணயத் தீநிரல் கோப்புகள் $300 – $1200 கேட்கிறது |
காரணம் |
|
விளைவு | 200,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 230,000 க்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டன[1][2] |
இதனால் ஸ்பெயினிலுள்ள டெலிபோனிகா நிறுவனம் உட்பட வேறு சில பெரிய நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன,[9] மேலும் பிரித்தானியாவிலுள்ள தேசிய மருத்தவச் சேவை (NHS),[10] ஃபெடெக்சு, ட்யுட்சு பான், மற்றும் லாடாம் விமான நிறுவனம் போன்றவைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன.[11][12][13][14] இந்த வைரசினால் குறைந்தபட்சம் 99 நாடுகளில் உள்ள மற்ற இலக்குகள் அதே நேரத்தில் தாக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.[15][16] இந்தியாவில் ஆந்திர மாநில காவல்துறை கணினிகள் தாக்கப்பட்டிருக்கின்றன.[17]
முந்தைய பிணையத் தீநிரல்கள் அணைத்தும் ஃபிஷிங் எனப்படும் மோசடி மின்னஞ்சல்களின் மூலம் பரவியது, இதுவும் அதுபோன்றதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது,[18] எனினும், எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.