![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Sri_Vaikuntha_Ekadashi_ISKCON_Bangalore.jpg/640px-Sri_Vaikuntha_Ekadashi_ISKCON_Bangalore.jpg&w=640&q=50)
வைகுண்ட ஏகாதசி
From Wikipedia, the free encyclopedia
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
விரைவான உண்மைகள் வைகுண்ட ஏகாதசி, கடைபிடிப்போர் ...
வைகுண்ட ஏகாதசி | |
---|---|
![]() பெங்களூரு இஸ்கான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி | |
கடைபிடிப்போர் | வைணவர்கள் |
வகை | இந்து |
முக்கியத்துவம் | முராசுரனை மகாவிஷ்ணு வீழ்த்தியது வைகுண்ட வாயில் கதவுகள் திறக்கும் நிகழ்வு |
கொண்டாட்டங்கள் | கோயில் திருவிழா, பூஜைகள் |
அனுசரிப்புகள் | விரதம் |
நாள் | தனுர் மாதம், சுக்ல பக்ஷம், ஏகாதசி திதி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மூடு
திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.