விஷ்ணு நாராயண் பட்கண்டே
From Wikipedia, the free encyclopedia
பண்டிட் விஷ்ணு நாராயண் பட்கண்டே (Vishnu Narayan Bhatkhande, 10 ஆகத்து 1860 – 19 செப்டம்பர் 1936) இந்திய இசைவாணரும், இந்துத்தானி இசை இலக்கணத்தை நவீனப்படுத்தியவரும், ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசை குறித்த முதல் நவீன கட்டுரையை எழுதினார். இராகா, இராகினி, புத்ரா (முறையே ஆண், பெண், குழந்தை ) என்ற முறையில் இராகங்கள் வகைப்பட்டிருந்ததை மாற்றி சுவரங்கள் அடிப்படையிலான ' தாட் ' என்ற முறையை அறிமுகம் செய்தார். இராகங்களை எளிதில் புரியவைக்க 'பந்திஷ்' என்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினார். இவை இராகங்களின் இலக்கணத்தை விளக்குவன. இவர் இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[2]
விரைவான உண்மைகள் விஷ்ணு நாராயண் பட்கண்டே, பின்னணித் தகவல்கள் ...
விஷ்ணு நாராயண் பட்கண்டே | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | (1860-08-10)10 ஆகத்து 1860 மும்பை,இந்தியா[1] |
பிறப்பிடம் | இந்தியர் |
இறப்பு | 19 செப்டம்பர் 1936(1936-09-19) (அகவை 76)[1] மும்பை, இந்தியா[1] |
இசை வடிவங்கள் |
|
இசைத்துறையில் | 1875–1935 |
மூடு