விவேகானந்தர்
இந்திய இந்து துறவி மற்றும் தத்துவவாதி / From Wikipedia, the free encyclopedia
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை.
விரைவான உண்மைகள் சுவாமி விவேகானந்தர் Swami Vivekananda, பிறப்பு ...
சுவாமி விவேகானந்தர் Swami Vivekananda | |
---|---|
சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர், 1893 இப்படத்தில் சுவாமிகள் வங்காளம், மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியது: “One infinite pure and holy—beyond thought beyond qualities I bow down to thee” - Swami Vivekananda | |
பிறப்பு | (1863-01-12)12 சனவரி 1863 கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
இறப்பு | 4 சூலை 1902(1902-07-04) (அகவை 39) பேலூர், கல்கத்தா, இந்தியா |
இயற்பெயர் | நரேந்திரநாத் தத்தா |
குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | சகோதரி நிவேதிதை, சுவாமி சதானந்தர், அளசிங்கப் பெருமாள் |
கையொப்பம் |
மூடு