விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 10, 2013
From Wikipedia, the free encyclopedia
சதுரங்கத்தில் கோட்டை கட்டுதல் என்பது அரசனையும் அதே நிறக் கோட்டைகளுள் ஏதேனுமொன்றையும் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு சதுரங்க சிறப்பு நகர்வு ஆகும். கோட்டை கட்டுதல் என்பது அரசனை முதலாவது வரிசையிலுள்ள கோட்டையை நோக்கி இரண்டு கட்டங்கள் நகர்த்தி, அக்கோட்டையை அரசன் கடந்து வந்த கட்டத்துக்குள் வைப்பதைக் குறிக்கும். அரசனும் தொடர்புபடுகின்ற கோட்டையும் போட்டி தொடங்கியதிலிருந்து நகர்த்தப்படாமலும் அரசனுக்கும் தொடர்புபடுகின்ற கோட்டைக்கும் இடைப்பட்ட கட்டங்கள் கைப்பற்றப்படாமலும் அந்நகர்வில் அரசன் முற்றுகையில் இல்லாதிருந்தாலும் அரசனை முற்றுகைகு ஆளாக்கக்கூடிய கட்டத்தைக் கடக்கவோ அடையவோ நேராவிட்டாலும் மட்டுமே கோட்டை கட்ட முடியும். கோட்டை கட்டுதலானது சதுரங்க விதிமுறைகளுள் அடங்குகின்றது. மேலும்...
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/A_Pamphlet_on_Gobinda_Doms_Gang%2C_under_the_Criminal_Tribes_Act_%28VI_of_1924%29%2C_dated_1942.jpg/320px-A_Pamphlet_on_Gobinda_Doms_Gang%2C_under_the_Criminal_Tribes_Act_%28VI_of_1924%29%2C_dated_1942.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Chess_gameboard..jpg/640px-Chess_gameboard..jpg)
குற்றப் பரம்பரைச் சட்டம் என்பது இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல் இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட இந்திய சமூகத்தினரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சமூகத்தினருக்கு சொந்தமான இடத்தில் அரசானது தேடுதல் நடத்துவதோ அல்லது அவர்களை கைது செய்வதற்கோ எந்தவித பிடியாணையும் இல்லாமல் இந்த சட்டத்தின் பெயரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும் 1876 இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக 1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கு இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர் கடைசியாக குற்றப் பரம்பரை சட்டம் (1924 ஆம் ஆண்டின் VI வது திருத்தம்) என்று இந்தியா முழுவதும் அமுலாகியது. மேலும்...