வாழ்க்கை வரலாறு
ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பற்றி மற்றொருவர் எழுதியது / From Wikipedia, the free encyclopedia
வாழ்க்கை வரலாறு அல்லது சுயசரிதை, என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான நிகழ்வுகளின் தொகுப்பாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. மாறாக ஒருவருடைய வாழ்க்கைச் சாித்திரம் என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை ஒருவருடைய அனுபவத்தின் நெருக்கமான விவரங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் ஆளுமைதிறனைப் பற்றி விளக்கமாக வர்ணிப்பதாகும்.அது மட்டுமல்லாமல் அத்தகைய ஆளுமையின் பகுப்பாய்வையும் சில நேரங்களில் உள்ளடக்கியிருக்கலாம்.
வாழ்க்கை வரலாற்று படைப்புகள் பொதுவாக புனைகதை அல்ல, ஆனால் ஒரு நபரின் வாழ்க்கையை சித்தரிக்க புனைகதை வழியாகவும் கூறலாம். வாழ்க்கை வரலாற்றின் ஒரு ஆழமான வடிவம் மரபு எழுத்துக்களிலே காணப்படும் என்று நம்பினாலும், கவிதை இலக்கியம் முதல் திரைப்படம் வரை பல்வேறு ஊடகங்களின் படைப்புகள் வழியாகவும் சுயசரிதை வெளிவரலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட சுயசரிதை என்பது யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய அனுமதி பெற்றோ, அவருடைய ஒத்துழைப்புடனோ அல்லது அவருடைய வழித்தோன்றல்களின் பங்களிப்புடனோ எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். சிலநேரங்களில் சுய சாிதை என்பது ஒருவர் தன்னைப் பற்றி தானோ அல்லது உதவியாளரை வைத்தோ கூட எழுதலாம்.