வாரணாசியிலுள்ள படித்துறைகள்
வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகள் / From Wikipedia, the free encyclopedia
வாராணசியிலுள்ள படித்துறைகள் (Ghats in Varanasi) என்பது உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசியில் பாயும் கங்கை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகள் பற்றியதாகும். நகரில் 88 படித்துறைகள் உள்ளன. பெரும்பாலானவை புனிதக் குளியலும், சடங்குகளும் நடைபெறும் இடமாகும். அதே நேரத்தில் மணிகர்ணிகா படித்துறையும், அரிச்சந்திரன் படித்துறையும் இறந்த உடல்களை தகனம் செய்யும் இடங்களாக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகின்றன.[1]
18-ஆம் நூற்றாண்டில், நகரம் மராட்டிய ஆட்சியின்கீழ் இருந்தபோது, பெரும்பாலான படித்துறைகள் புனரமைக்கப்பட்டன.[2] தற்போதைய படித்துறைகளுக்கு மராட்டியர்கள், சிந்தியர்கள், ஓல்கர்கள், போன்சலேக்கள் பேஷ்வாக்கள் ஆகியோரின் ஆதரவு இருந்தது. பல படித்துறைகள் புராணக்கதைகளுடனோ அல்லது புராணங்களுடனோ தொடர்புடையவை. அதே நேரத்தில் பல படித்துறைகள் தனியாருக்கு சொந்தமானவை. படித்துறைகளின் குறுக்கே பிரபலமான காலை நேர படகுச் சவாரி பார்வையாளர்களை ஈர்க்கிறது.